வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றே
என் விழி மூடவில்லை பார்வை இடம் மாறவில்லை
பல யுகம் தாண்டி வந்தேன் உன் முகம் காட்டு பெண்ணே
வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றே
நொடி ஒவ்வொன்றும் உன்னை தேடி வாழ்கிறதே
சில்லென்ற காற்று என்னை கடிக்கின்றதே
காத்திருக்கும் நேரம் மிகவும் சுடுகின்றதே
என் இமை மூடா கண்கள் உன் நிழல் பார்க்க துடிக்கின்றதே
படம் : அட்டகத்தி (2012)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர் : பிரதீப்
வரிகள் : கபிலன்
0 Comments:
Post a Comment