கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா
கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா
கல்வியா செல்வமா வீரமா
படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா
பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா
படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா
பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா
படித்தவன் படைத்தவன் யாராயினும்
படித்தவன் படைத்தவன் யாராயினும்
பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா
பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா
கல்வியா செல்வமா வீரமா
ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது
அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது
ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது
அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது
மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது
மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது
கல்வியா செல்வமா வீரமா
மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா
காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா
மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா
காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா
தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா
தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா
இவை மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா
இவை மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா
கல்வியா செல்வமா வீரமா
படம் : சரஸ்வதி சபதம்
இசை : மகாதேவன்
பாடியவர் : செளந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்
3 Comments:
நல்லதொரு நாளில் சிறப்பான பாடல் பகிர்வு...
விழாக்கால வாழ்த்துக்கள்... நன்றி...
கருத்துள்ள பாடல்..
கருத்துள்ள பாடல்..
Post a Comment