கண்ணோடு கண்ணான என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
அன்னை உன்னை அடித்தாளோ சாமி
பிஞ்சு நெஞ்சு வலிக்காதோ சாமி
அன்னையும் நான் தானே
உன் அப்பனும் நான் தானே
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உனை யாரடித்தார் அப்பா
நல்ல தாயின் கண்ணிரண்டில் கோபம் வந்த மாயமென்ன
பாசம் நெஞ்சில் இருந்தாலும் நடிப்பதில் லாபமென்ன
வெண்ணையைக் கண்ணன் போல் திருடி விட்டாயோ
வீதியில் மண்ணெல்லாம் தின்று விட்டாயோ
அம்மா மண்ணைத் திங்க நான் சிறுவனோ
மாயவனோ கிறுக்கனோ நீயே பாரு
வெறுப்பது அம்மா தான்
வெறுப்பது அம்மா தான் விட்டு விட்டு போகாதே
கோழி ஒண்ணு குஞ்சை மிதிச்சா சேதங்கள் வாராதே
அழுகை வராதோ எனக்கு அழுகை வராதோ
ஊர விட்டுப் போனாலும் போக ஒரு ஊரி்ல்லை
சொந்தம் பந்தம் பாத்தாலும் சோறு தர ஆளில்லை
பக்கத்துல அவ இருந்தா பசியே எடுக்காது
கோபத்துல அடிச்சாலும் கொஞ்சமும் வலிக்காது
போடம்மா போடு நல்லா போடு இன்னும் போடு போடு
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
சின்னப் பையன் நீயல்ல அள்ளி வைத்து தாலாட்ட
பெரிய பையன் நீயல்ல புத்திமதி நான் சொல்ல
அனாதையாய் வாழ்ந்தது அடடா அன்று
இப்போது நான் கொண்டது பி்ள்ளைகள் ரெண்டு
சொந்தம் என்பது
சொந்தம் என்பது தொடர்கதை ஆனது
பந்தம் என்பது விடுகதை ஆனது
வாழ்வே விடுகதை ஆனது
என்னம்மா மனசுக்குள் பாரமா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
அன்னை என்னை அடித்தாளே சாமி
பிஞ்சு நெஞ்சு வலிக்காதோ சாமி
அன்னையும் நான் தானே உன் அப்பனும் நான் தானே
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
படம் : சிப்பிக்குள் முத்து
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள் : வைரமுத்து
1 Comment:
மிகவும் பிடித்த பாடல்...
பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி...
Post a Comment