கருப்பான கையாலே என்ன புடுச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
கருப்பான கையாலே என்ன புடுச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீச முடிய செஞ்சுக்குவேன் மோதிரமா
செவப்பாக இருக்காளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்ன இழுக்குதம்மா
அருகம் புல்லு ஆட்ட இப்போ மேயுதம்மா
பார்வையால ஆயுள்ரேகை தேயுதம்மா
இவ காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா
கருப்பான கையாலே என்ன புடுச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
வெள்ளிக்கிழமை பத்தரை பணிரெண்டு உன்னை பாத்தேனே
அந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே
தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே
ஆத்துக்குள்ள மீன் பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் ஐயா
செவப்பாக
ஆஹா
இருப்பாளே
ஆமா
செவப்பாக
செவப்பாக இருக்காளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்ன இழுக்குதம்மா
ஓ உருக்கி வச்ச இரும்பு போல உதடு ஒனக்கு
அட நெருங்கும் போது கரண்டு போல ஷாக்கு எனக்கு
ஏ வெட்டும் புலி தீப்பெட்டி போல் கண்ணு உனக்கு
நீ பாக்கும் போது பத்திக்கிச்சு மனசு எனக்கு
பூமியிலே எத்தனையோ பூவு இருக்கு
உன் பூப்போட்ட பாவாடையில் எனக்கு கிறுக்கு
கரு கரு கருப்பான கையாலே என்ன புடுச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
இவ காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா
கருப்பான கையாலே என்ன புடுச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா பூக்குதம்மா
படம் : தாமிரபரணி (2006)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : ரஞ்சித், ரோசிணி
வரிகள்: நா. முத்துக்குமார்
2 Comments:
கற்பூரநாயகியே கனகவல்லி!!!
:)
Post a Comment