Friday, October 26, 2012

எங்கெங்கோ கால்கள் செல்லும்



எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
உன் சொந்தம் இங்கு யார் யாரோ
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்

காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வராதே
பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே
எதனை கொண்டு நாம் வந்தோம்
எதனை கொண்டு போகின்றோம்
ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்

காற்றுக்கு யார் இங்கே பாட்டு சொல்லி தந்தாரோ
ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டு தந்தாரோ
வாழ்க்கை எங்கு போய் சேரும்
காலம் செய்யும் தீர்மானம்
என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
உன் சொந்தம் இங்கு யார் யாரோ
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு

படம் : நந்தா (2001)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : இளையராஜா
வரிகள் : புலமைப்பித்தன்

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பாடல்...

பாடல் வரிகளுக்கு நன்றி...

Last 25 songs posted in Thenkinnam