முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னாளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளைத் தைக்காதே
அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கையாவின் கவிதையா
ஏய் உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே
உள்ளிருக்கும் பொட்டு உந்தன் குட்டு சொல்லுதே
என்னுடய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சிக்கோ
எனக்கு இருக்கும் சக்தி பராசக்தி புரிஞ்சிக்கோ
கால் கொலுசு தான் கலகலக்குது
கையின் வளையல் காதுக்குள்ளே கானம் பாட
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளைத் தைக்காதே
போட்டிருக்கும் கோஷா வேசம் பேஷா பொருந்துதே
பெண்ணழகு மொத்தம் காண சித்தம் விரும்புதே
வெண்ணிலவில் வேகம் ஓடும் மேகம் விலகுமா
வண்ண உடல் யாவும் காணும் யோகம் வாய்க்குமா
கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே
படம் : தொட்டால் பூ மலரும் (2007)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : ஹரிச்சரண், யுவன் சங்கர் ராஜா
வரிகள் : வாலி
1 Comment:
நல்ல பாடல்... படமாக்கிய விதம் நன்றாக இருக்கும்...
Post a Comment