Wednesday, April 9, 2008

360. எனது விழி வழி மேலே ஹோ..


எனது விழி வழி மேலே ஹோ
கனவு பல விழி மேலே ஹோ
வருவாயா நீ வருவாயா
வருவாயா வருவாயா என நானே எதிர் பார்த்தேன்
அது சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு (2)
(எனது விழி..)

பள்ளிக்கூட பாடம் ஏதும் எனக்கில்லை ஞாபகம்
கண்ணில் நூறு பாடம் கேட்டும் மறக்காத ஞாபகம்
தடுமாற்றம் எதற்கு படித்தாலே உனக்கு
ல ல லா ல ல ல லா ... ல ல லா ல ல ல லா
காதல் சிறகை காற்றில் விரித்து
நினைத்தாலே இனிக்கும் கனவின்று பலிக்கும்
உறங்காமல் உனைத்தானே நினைத்தே தனியா தவித்தேனே
(எனது விழி..)

பிள்ளை போல தோளில் போட்டு தாலாட்டு பாடுவேன்
முல்லை பூவில் மேடை போட்டு உன்னோடு ஆடுவேன்
இமைக்காமல் ரசித்தேன் ருசி பாத்து பசித்தேன்
லா லா ல லா லா லா ல ... லா லா ல லா லா லா ல
ஏது உறக்கம் வேண்டாம் கிறக்கம்
வட்டி போட்டு மொத்தமா கட்ட வேண்டும் முத்தமா
உனைத்தானே உனைத்தானே தனியா தவித்தே துடிக்காதே ஹோய்
(எனது விழி..)

படம்: சொல்ல துடிக்குது மனசு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S ஜானகி, KJ ஜேசுதாஸ்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam