Monday, April 28, 2008

397. வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்



வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்..

யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே தள்ளிப்போடி
ராமனின் மைதிலி நாந்தாண்டி
பொம்பள போக்கிரி ஓடிப்போடி
உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி

பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
என் முந்தியில பங்கு கேட்டா வெட்டி புடுவேன்
அடி கண்டவளும் வந்து கைய வைக்க
அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல
(வந்தேன் வந்தேன்..)

பேசாதே பேசாதே
கொஞ்சம் அழகாக ஏந்தான் பிறந்தேனோ
போதும் நான் பட்ட பாடு
வேங்கை ஒரு பக்கம் சிங்கம் ஒரு பக்கம்
நடுவில் நாந்தானே ஆடு
அட என் ஜீவன் போனாலும் உன் கற்பை நான் காப்பேன்
சிரி கொஞ்சம் ஸ்ரீ ராமா
(வந்தேன்..)

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
வாயேண்டி ஆடேண்டி முட்டிதான் பார்க்கலாம் வாரியாடி
உன் முட்டிதான் பேர்ந்திடும் ஓடி போடி
நான் பச்ச கிளி நீ வெட்டுக் கிளி போட்டி என்னடி
உன்னை ஆட்டி வைப்பேன் பேயை ஓட்டி வைப்பேன்
எந்தன் ஸ்ரீ ராமன் மேல் ஆணை
(வ்ந்தேன்..)

எனக்கு எனக்கு நீ சரிசம கம
தத்திழாங்கு தோம் தததாரிகிரிதோம்
ஏய் எனக்கு நீயா உனக்கு நானா
ஒண்டிக்கு ஒண்டி பார்த்துடலாமா?
வாயேண்டி ஜதி போடேண்டி

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே
வந்தேன் ரெடியா
வாயாடி எனக்கு சமமாடி

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

படம்: பஞ்சதந்திரம்
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, நித்யாஸ்ரீ, கமல்ஹாசன்

1 Comment:

ரசிகன் said...

//வாயேண்டி ஆடேண்டி முட்டிதான் பார்க்கலாம் வாரியாடி
உன் முட்டிதான் பேர்ந்திடும் ஓடி போடி
நான் பச்ச கிளி நீ வெட்டுக் கிளி போட்டி என்னடி
உன்னை ஆட்டி வைப்பேன் பேயை ஓட்டி வைப்பேன்//

ஏதோ குழாயடி சண்டைய கேக்கற மாதிரியே ஒரு ஃபீலிங்கு:)))))))

இதை காதுகுளிர கேட்டு ,பிராக்டிஸ் பண்ணி எழுதிய மைபிரண்டுவுக்கு வாழ்த்துக்கள்:P:)))

Last 25 songs posted in Thenkinnam