Saturday, February 7, 2009

933. என்னை பந்தாட பிறந்தவளே



என்னை பந்தாட பிறந்தவளே
இதயம் ரெண்டாக பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண் கொண்டு கடைந்தவளே
உன்னை கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் கொல்ல வாராயோ
(என்னை பந்தாட..)

செங்குயிலே சிறு வெயிலே
மண்ணில் உள்ள வளம் இன்னதின்னதென
செயற்கை கோல் அறியும் பெண்ணே
உன்னில் உள்ள வளம் என்னதென்ன
உள்ளங்கை அறியும் கண்ணே
நீ அழகின் மொத்தம் என்று சொல்லு
அந்த ப்ரம்மன் வைத்த முற்றுப்புள்ளி

செங்குயிலே சிறு வெயிலே
வாய் திறந்து கேட்டுவிட்டேன்
வாழ்வை வாழ விடு அன்பே

இனியவனே எனையனே
உன்னை காணவில்லை என்னும் போது
நெஞ்சில் சின்ன பைத்தியங்கள் பிடிக்கும்
பஞ்சு மெத்தைகளில் தூக்கம் இல்லை என்று
பற்கள் தலையணையை கடிக்கும்
உன்னை தொட்டு பார்க்க மனம் துடிக்கும்
நெஞ்சில் விட்டு விட்டு வெடி வெடிக்கும்
சின்னவனே என்னவனே
மூக்கு மீது மூக்கு வைத்து
நெற்றி முட்டிவிட வாராய்
(என்னை பந்தாட..)

படம்: உள்ளம் கேட்குமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், மதுமிதா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam