Wednesday, February 25, 2009

973. தனியே தன்னந்தனியே





தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே பொறுமை வென்று விடுவேன்
(தனியே..)
புரியாதா பேரன்பே புரியாதா பேரன்பே
ஓ தனியே தனியே தனியே

அக்டோபர் மாதத்தில் அந்திமழை
வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில்
இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்
(அக்டோபர்..)

அன்று கண்கள் பார்த்துக்கொண்டோம்
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்
(அன்று..)
ரசணை என்னும் ஒரு புள்ளியில்
இரு இதயம் இணையக் கண்டோம்
(ரசணை..)
நானும் அவளும் இணைகையில் நிலா
அன்று பால்மழை பொழிந்தது
(தனியே..)

என்னுடைய நிழலையும் இன்னொருத்தி
தொடுவது பிழையென்று கருதிவிட்டாள்
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹெல்லோ சொல்லி
கைக்கொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்
நான் ஜீவன் உருகி நின்றேன்
(அந்த கள்ளி..)
சின்னஞ்சிறு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்
சின்னஞ்சிறு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்
மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள்
வரும் வழி தெரியுது
தனியே..
(தனியே..)

படம்: ரிதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam