Sunday, February 22, 2009

964. நிழலினை நிஜமும் பிரிந்திடுமா





நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவரை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா
(நிழலினை..)

நடமாடும் சாபமா நான் இங்கே இருக்கு
விதி செய்த சதியா தெரியல அம்மா
கடலும் அலையும் கடலில் தான் சேறும்
அது போல என்னையும் சேர்த்துக்கம்மா
உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது
எங்கே நான் யாரோ என்று ஆகி போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதும்மா
மொத்த பூமி எங்கே தான் சொந்தம்மா
பத்து மாசம் உலியிருந்தேன் பக்குவம்மா
பூமிக்கு நான் வந்தது என்ன குத்தமம்மா

திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாக்கி போச்சு
சரி செய்ய வழியும் தெரியல அம்மா
சூரியன் ஒடஞ்ச பகல் இல்ல அம்மா
ஆகாயம் மறைஞ்ச அகிலமே சும்மா
என்னை சுத்தி என்னென்னமோ நடக்குதம்மா
கண்டதை எல்லாம் கனவாகி போயிடும்மா
தூக்கத்தில்ல உன்னை நானும் தொலைச்சேனம்மா
தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா
(நிழலினை..)

படம்: ராம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், யுவன் ஷங்கர் ராஜா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam