Thursday, July 16, 2009

நாடோடிகள் - சம்போ சிவ சம்போ



சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் துணிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொறுங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும் !

சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ

நீ என்ன நானும் என்ன
பேதங்கள் தேவை இல்லை
எல்லோரும் உறவே என்றால்
சோகங்கள் ஏதும் இல்லை
சிரிக்கின்ற நேரம் மட்டும் நட்பென்று தேங்கிடாதே
அழுகின்ற நேரம் கூட நட்புண்டு நீங்கிடாதே
தோல்வியே என்றும் இல்லை
துணிந்தபின் வலி இல்லை, வெற்றியே !

சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ

உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் துணிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொறுங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும்

சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ

ஏக்கங்கள் தீரும் மட்டும் வாழ்வதா வாழ்க்கையாகும்
ஆசைக்கு வாழும் வாழ்க்கை ஆற்றிலே கோலமாகும்
பொய்வேடம் வாழ்வதில்லை மண்ணோடு வீழும் வீழும்
நட்பாலே ஊரும் உலகும் எந்நாளும் வாழும் வாழும்
சாத்திரம் நட்புக்கில்லை
ஆத்திரம் நட்புக்குண்டு.. காட்டவே !!!

சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ

எரியும் விழிகள் உறங்குவதென்ன
தெரியும் திசைகள் பொசுங்குவதென்ன
முடியும் துயரம் நிகழுவதென்ன
நெஞ்சில் நிழலென்ன
மறையும் பொழுது திரும்புவதென்ன
மனதை பயமும் நெருங்குவதென்ன
இனியும் இனியும் தயங்குவதென்ன
சொல் சொல் பதிலென்ன

சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ

படம் : நாடோடிகள்
இசை : சுந்தர். சி. பாபு
பாடியவர் : சங்கர் மகாதேவன்
பாடல் வரிகள் : யுகபாரதி

2 Comments:

Anonymous said...

Thanks G3 for posting this song..
- VeNa

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

அருமையான பாடல் வரிகள். பாடலுக்கும் வரிகளுக்கும் நன்றி. ஒரு சிறு திருத்தம்.

" முடியும் துயரம் திமிருவதென்ன

நெஞ்சில் அனலென்ன "

என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

Last 25 songs posted in Thenkinnam