Friday, July 31, 2009

என்னம்மா தேவி ஜக்கம்மா





என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது ஞாயமா

என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது ஞாயமா
சின்ன வயசுல சிகரட்ட புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டையே தீப்பெட்டி கேட்கிறான்
சின்ன வயசுல சிகரட்ட புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டையே தீப்பெட்டி கேட்கிறான்
பசுமாடும் ஆத்தாவ அம்மான்னு சொல்லுது
பச்ச தமிழனும் மம்மின்னு சொல்லுறான்
(என்னம்மா..)

சந்தன பூமி தந்தகம் ஆச்சு
காத்துக்கு இப்போ திணறுது மூச்சு
மரம் இல்லா ஊருல மழை எங்க பெய்யுது
குளத்துலத்தான் இப்போ கிரிக்கெட்டு நடக்குது
அட விவசாயம் செய்யுன்னா வேணான்னு சொல்லுறான்
வெளிநாடு போயிதான் ஒட்டகம் மெய்க்கிறான்
(என்னம்மா..)

ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா

கோட்டையில் கொடியெல்லாம் கிழியாம பறக்குது
குமரிப்பொண்ணு துணி கிழிஞ்சுதான் தொங்குது
நத்தைக்கு கூட முதுகுல வீடு
நடைப்பாதை தானே ஏழைக்கு கூடு
அட சாமிக்கு வளைகையில மனசார கும்பிட்டோம்
சாக்கடை அள்ளுற கைகளை விட்டுட்டோம்
(என்னம்மா..)

படம்: தம்பி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக், மாணிக்க விநாயகம்

Thursday, July 30, 2009

அக்னி நட்சத்திரம் - ஒரு பூங்காவனம்

Get this widget | Track details | eSnips Social DNA


ஒரு பூங்காவனம் புதுமணம்
அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)

நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்நடக்கும் தேவதை
என் கோவில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)

நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலைகொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)

படம் : அக்னி நட்சத்திரம்
பாடியவர் : S ஜானகி
இசை : இளையராஜா

எங்கே என் புன்னகை




எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓஹோ
தாளிசை நான் பாடவா
(எங்கே என்..)

மழை நீரில் மேகமோ தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது
தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது
என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை நீர் செய்த்ய மனம் ஏங்குது
முகிலயில் நனைந்ததை முத்ததால் காயவை
எந்தன் தனிமையை தோள் ச்செய்யவா
தாளத்தில் நீ சேரவா ஓஹோ
தாளிசை நான் பாடவா

பனி சிந்திடும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ கண்ணீர் இறங்குமோ
அது காலத்தில் முடிவல்லவோ
தாளத்தில் நீ சேரவா ஓஹோ
தாளிசை நான் பாடவா

படம்: தாளம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஷோபா

Wednesday, July 29, 2009

சக்கர இனிக்கிற சக்கர





புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா
கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா
நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா வா வா
(புத்தகம்..)

சக்கர இனிக்கிற சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கர
சக்கர இனிக்கிற சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கர
நீ அக்கர நான் இக்கர
நீ அக்கர நான் இக்கர
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர
சக்கர இனிக்கிற சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கர

ஹேய் ஹேய் கேள்விக்கு பதில் என்ன தெரியாது
கலங்கி நிக்கிறேன் புரியாது
நீ சொல்லு நீ சொல்லு தெரிஞ்சிக்கிறேன்
நூறு மார்க்கு இந்த பரிட்சையில் வாங்கி காட்டுறேன்
உத்தரவின்றி உள்ளே வா சக்கர இனிக்கிற சக்கர
உத்தரவின்றி உள்ளே வா எறும்புக்கு என்ன அக்கர
உத்தரவின்றி உள்ளே வா சக்கர இனிக்கிற சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கர
நீ அக்கர நான் இக்கர
நீ அக்கர நான் இக்கர
என்னை சொக்கும்படி ஏம்மா வைக்கிர

கிட்ட வந்து தட்டு நீ கேட்காதைய்யா தவிலு
அது கேட்டா தட்டும் விரலு
சின்ன நூலை தன்னோடு சேர்த்து கொள்ளும் ஊசி
அந்த சங்கதி என்ன யோசி
என்னது பண்ணுது சிங்காரி
இப்படி நிக்கிற ஹொய்யாரி
உன் இரு கண் வெடி பொல்லாது
உள்ளது எப்போதும் சொல்லாது
ராத்திரி நேர பூஜை தினம் புரிந்திடுதே
உத்தரவின்றி உள்ளே வா
பூத்திரி ஏத்தி வைத்து அதை படித்திட
உத்தரவின்றி உள்ளே வா
மன்மத ராகம் ஒன்று மனம் இசைத்திட
வா வா சக்கர இனிக்கிர சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கர

ரொம்ப ரொம்ப பாசாங்கு பண்ணாதேடா கண்ணா
நான் பாவப்பட்ட பெண்ணா
மெத்தை மீது தாவாது
தத்தை ஒன்று வாடும்
என் வித்தை காண தேடும்

தொட்டதும் பட்டதும் பூ மலரும்
முத்திட முத்திட தேன் சிந்தும்
கற்றது உன்னிடம் கையளவு
உள்ளது என்னிடம் கடலளவு
இலக்கிய மாலை நேரம் மனம் மயங்குது
உத்தரவின்றி உள்ளே வா
சுகம் என்னும் வெல்லம் பாய
மடை திறந்தது
உத்தரவின்றி உள்ளே வா
இனி ஒரு கேள்விக்கான விடை க்டையாது வா வா
(சக்கர..)

படம்: நியூ
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, SP பாலசுப்ரமணியம்

Tuesday, July 28, 2009

பூவேலி - காண்பதில் எல்லாம்



காண்பதில் எல்லாம் தலைகீழ் தோற்றம்
என்னொடு ஏனோ இத்தனை மாற்றம்

பூமி என்பது தூரம் ஆனதே
நட்சத்திரங்கள் பக்கம் வந்ததே
மனிதர் பேசும் பாஷை மறந்து
பறவைகளோடு பேச தோணுதே
காணும் பிம்பம் கண்ணில் மறைந்து
காணா உருவம் கண்ணில் தோணுதே
அன்பு திருமுகம் தேடி தேடி
கண்கள் என்னை தாண்டி போகுதே

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

புரியா மொழியோ புரிந்து போகும்
புரிந்த மொழியோ மறந்து போகும்
சரியாத உடை சரி செய்வதாக
சரியாய் இருந்தும் சரியச் செய்யும்
நிலவை போலவே இருளும் புடிக்கும்
உணவை போலவே பசியும் ருசிக்கும்
எந்த பேனா வாங்கும் பொழுதும்
என்னவள் பெயர் தான் எழுதிப்பார்க்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

கண்ணாடி முன்னே பேசிப் பார்த்தால்
வார்த்தைகள் எல்லாம் முந்தி அடிக்கும்
முன்னாடி வந்து பேசும் பொழுதோ
வார்த்தைகள் எல்லாம் நொண்டி அடிக்கும்
பாதிப் பார்வை பார்க்கும் போதே
பட்டாம் பூச்சிகள் நெஞ்சில் பறக்கும்
கல்லில் இருந்தும் கவிதை முளைக்கும்
காகிதம் மணக்கும் கண்ணீர் இனிக்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

கண்கள் என்னும் இரண்டு ஜன்னல்
திறந்து வைத்தும் மூடிக் கொள்ளும்
இதயம் என்னும் ஒற்றைக் கதவு
மூடி வைத்தும் திறந்து கொள்ளும்
நீ என்பது நீ மட்டும் அல்ல
மூளையின் மூலையில் ஒரு குரல் கேட்கும்
நான் என்பதின் இன்னொரு பாதி
யார் என்பதை இதயம் கேட்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

படம் : பூவேலி
இசை : பரத்வாஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன், சுஜாதா

மாசிலாமணி - டோரா டோரா அன்பே டோரா



டோரா டோரா அன்பே டோரா
உனக்கு என்ன அழகே ஊரா
நீ என்ன பூக்களின் தேசமா

டோரா டோரா அன்பே டோரா
மனசும் மனசும் பேசுது ஜோரா
நீ என்ன என்னுயிர் சுவாசமா

உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே
என் உயிரின் துண்டாகும்
உன் ஸ்பரிசத்தில் நிறமாற்றங்கள்
என் மேலே உண்டாகும்

உந்தன் உயிரோடு உயிர் சேறும் ஓர் நொடி
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி
(டோரா டோரா..)

இது இது இது இது காதலா
என் இதயத்திலே ஒரு கூக்குரல்
அது அது அது அது காதல்தான்
என்னை தடவியதே உன் பூவிதழ்

பூக்கூடை போலே தான் என் வசம் மோதினாய்
கூழாங்கல் போலே தான் உடைகிறேன் ஏந்துவாய்
இதயம் எங்கே இயங்கும் என்று
உன்னால் கண்டேன் இப்போதே
(உந்தன்..)

ஒரு ஒரு ஒரு ஒரு சமயத்தில்
உன் மனதினிலே என் ஞாபகம்
சில சில சில சில நேரத்தில்
பொய் கோபத்தை காட்டிடும் உன் முகம்

யார் கண்கள் பார்த்தாலும் உன்னைப் போல் தோன்றுதே
ஐயப்போ கிறுக்கா நீ உன் மனம் திட்டுதே
எனக்கும் கூட உனக்கு கூட
இது போல் மாற்றம் உண்டாச்சோ
(உந்தன்..)
(டோரா..)

படம்: மாசிலாமணி
இசை: D இமான்
பாடியவர்கள்: பால்ராம், கல்யாணி

Monday, July 27, 2009

சத்தம் போடாதே : அழகுக் குட்டிச் செல்லம்



அழகுக் குட்டிச் செல்லம்
உன்னை அள்ளித் தூக்கும் போது
உன் பிஞ்சுவிரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளைக் கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன்
நான் திரும்பிப் போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி
உனக்குத் தெரிந்த மொழியிலே
எனக்குப் பேசத் தெரியல‌
எனக்குத் தெரிந்த பாஷை பேச
உனக்குத் தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புதுப்பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

ரோஜாப்பூ கைரெண்டும்
காற்றோடு கதைபேசும்
உன் பின்னழகில் பெளர்ணமிகள்
தகதிமிதா ஜதிபேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை
ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால்வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டைப் பிடித்துவிட்டான் இப்படி ஓர்
அட்டினக்கால் தோரணை தோரணை

நீ தின்ற மண்சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்
நீ சிணுங்கும் மொழிகேட்டால்
சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்குக் காட்டி ஓடுகின்ற
கண்ணனே புன்னகை மன்னனே

திரைப்படம் : சத்தம் போடாதே
பாடல் : நா. முத்து குமார்
பாடியவர் : சங்கர் மஹாதேவன்
இசை : யுவன் சங்கர் ராஜா

ஆயிரத்தில் ஒருவன் - தாய் தின்ற மண்ணே



தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
பிள்ளையின் கதறல்
பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
ஒரு பேரரசன் புலம்பல்

நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே

கயல் விளையாடும் வயல் வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்
காவிரி மலரின் கடிமணம் தேடி
கருகி முடிந்தது நாசி
சிலை வடி மேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்

புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக் கறி பொறிப்பதுவோ
காற்றை குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ
மன்னன் ஆளுவதோ...

தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே

நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு
அழுகின்ற அரசன்
பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோ
தூதோ முன் வினை தீதோ
களங்களும் அதிர களிறுகள் பிளிற
சோழம் அழைத்து போவாயோ
தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அதுவரை அதுவரை...

தமிழர் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே.. அழாதே
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாளே.. அழாதே
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உறையில் தூங்கும் வாளே.. அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே.. அழாதே

நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

படம் : ஆயிரத்தில் ஒருவன்
இசை : GV பிரகாஷ்
பாடியவர் : விஜய் ஜேசுதாஸ்
பாடல் வரிகள் : வைரமுத்து

இதயத்தை திருடாதே - காவியம் பாடவா தென்றலே



காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே
காவியம் பாடவா தென்றலே

விளைந்ததோர் வசந்தமே
புதுப்புனல் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் எனபதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
கலைந்து போகும் கானல் நீரிது

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ

புலர்ந்ததோ பொழுதிதுவோ
புள்ளினத்தின் மகோத்ஸவம்
இவை மொழி இசைத்ததும்
சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே
மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்கம்தான்
முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
காவியம் பாடவா தென்றலே

படம் : இதயத்தை திருடாதே
இசை : இளையராஜா
பாடியவர் : மனோ
பாடல் வரிகள் : வாலி

வாமணன் - ஒரு தேவதை பார்க்கும்



ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
மிக அருகினில் இருந்தும் தூரமிது
இதயமே ஓ இவளிடம்
உருகுதே ஓ
இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே
பார்க்காதே ஓ என்றாலும் ஓ
கேட்காதே ஓ..

என்னை என்ன செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும் தரையினில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வாழ்க்கை தெரிஎதும் தொலைத்து போகிறேன்
காதல் என்றால் ஓ பொல்லாதது
புரிகின்றது ஓ

கண்கள் இருக்கும் காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே
மரணன் நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழ்வேன்
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓ
இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே
(ஒரு தேவதை..)

படம்: வாமணன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ரூப்குமார்

Sunday, July 26, 2009

வயசுப் பொண்ணு : காஞ்சிப் பட்டுடுத்தி

காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்

காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்

காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகை பெற வேண்டும்

தென் குமரி கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே
பெண் குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்


(தென் குமரி கடலினிலே...)
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பேசுவோம்
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
நாம் சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்


(காஞ்சிப்பட்டுடுத்தி...)

தேனருவிக்கரையினிலே திருக்குற்றால மலையினிலே
நீரருவி உடல் தழுவக் குளிக்கணும்
நான் நெருங்கி வந்து உன் அழகை ரசிக்கணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
பொய்க்கோபம் கொண்டு நீ விலகிப்போகணும்
பொய்க்கோபம் கொண்டு நீ விலகிப்போகணும்


(காஞ்சிப்பட்டுடுத்தி...)

பூம்புகாரின் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்
உன் கணவனுக்கு பெருமைகளை சேர்க்கணும்


(பூம்புகாரின் நாயகியாம்...)
மாமியார் வாழ்த்தனும் மற்றவர் போற்றனும்
மாமியார் வாழ்த்தனும் மற்றவர் போற்றனும்
இந்த மாநிலமே உன் புகழை பாடனும்
இந்த மாநிலமே உன் புகழை பாடனும்

(காஞ்சிப்பட்டுடுத்தி...)


படம்: வயசுப்பொண்ணு.
பாடியவர்கள்: யேசுதாஸ், சாவித்திரி
பாடலாசிரியர் : முத்துலிங்கம்.
இசை: மெல்லிசை மன்னர். எம்.எஸ்.விஸ்வநாதன்.


இன்று பிறந்த நாள் விழா காணும் அன்பு நண்பர்
நட்புடன் ஜமால் அவர்களுக்காக இந்தப் பாடல் பரிசளிக்கப் படுகிறது!
இந்தப் பாடல் டெடிகேட் செய்யப் படுகிறது!

ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன்





ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன்
ஆகாயம் சேராமல் தனியே வருவது ஏனோ ஏன்
ஓ காதலே உன் பேர் மௌனமா நெஞ்சோடு பொய்
சொல்லி நிமிடம் வளர்ப்பது சரியா சரியா சரியா
தொலைவில் தொடுவாய் கரையை தொட தொட
அருகில் நெருங்க விலகி விடும் விடும்
இருவர் மனது ஏனோ வலம் வர வர
உருவம் காற்றாய் ஊடல் உடைபட

ஏய் பெண்மையே கர்வம் ஏனடி
வாய்வரை வந்தாலும் வார்த்தை மறிப்பது ஏனோ
ஓ சுவாசமே உடல்மேல் கூடவா என் ஜீவன்
தீண்டாமல் வெளியே சொல்லாத நீ வெற்றிக்கொள்ள
உன்னை தொலைக்காதே
யார் சிரித்தாலும் பாலைவனங்கள் மலரும்

ஓ காதலா உன் பேர் மௌனமா சொல் ஒன்னு
இல்லாமல் மொழியும் காதல் இல்லை இல்லை
இல்லை ஓ சுபாவ ஓர் வார்த்தௌ சொல்லடா
முதல் வார்த்தை நீ சொன்னால்
நான் மறுவார்த்தை சொல்வேன்
நான் தினம் சொல்வேன்
எந்தன் காதல் சொல்வேன்
ஊடலில் அழியாமல் வாழும் காதல் சொல்வேன்

படம்: குஷி
இசை: தேவா
பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன், ஹரிணி

வாமணன் - ஏதோ செய்கிறாய்


ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
(ஏதோ..)

உன்னோடு பேசினால் உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே
கண்ணாடி பார்க்கையில் என் கண்கள் உன்னை காட்டுதே
பெண்ணே இது கனவா நிஜமா உன்னை கேட்கின்றேன்

அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

பெண்ணே எந்தன் கடிகாரம் எந்தன் பேச்சை கேட்கவில்லை
உன்னை கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை
இதுவரை யாரிடமும் என் மனது சாயவில்லை
என்ன ஒரு மாயம் செய்தாய் என்னிடத்தில் நானுமில்லை

என்ன இது என்ன இது என் நிழலை காணவில்லை
உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை
எங்கே என்று கேட்டேன் உன் காலடி காட்டுதடி

அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள வார்த்தை ஏதும் தேவையில்லை
மனதில் உள்ள ஆசை சொல்ல மௌனம் போல மொழி இல்லை
இதுவரை என் உயிராய் இப்படி நான் வாழ்ந்ததில்லை
புத்தம் புது தோற்றமிது வேரெதுவும் தோன்றவில்லை

நேற்று வரை வானிலையில் எந்த ஒரு மாற்றமில்லை
இன்று எந்தன் வாசலோடு கண்டுகொண்டேன் வானவில்லை
ஒரே ஒரு நாளில் முழு வாழ்க்கை வாழ்ந்தேனே

அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
(ஏதோ..)

படம்: வாமணன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஜாவேட் அலி, சௌம்யா ராவ்

Friday, July 24, 2009

தாலி தானம் : ஒரு புல்லாங்குழல்....!



பி.சுசீலா:
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!

ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!

வாணி ஜெயராம்:

என்னை அன்னை என்று சொல்லப் படைத்தேன்
அழைத்தேன் தமிழ்த்தேன் அளித்தேன்!
என்னை அன்னை என்று சொல்லப் படைத்தேன்
அழைத்தேன் தமிழ்த்தேன் அளித்தேன்!

பி.சுசீலா:
பிள்ளை இல்லை என்ற சொல்லை அழித்தேன்!
பிழைத்தேன் செழித்தேன் தழைத்தேன்!
பிள்ளை இல்லை என்ற சொல்லை அழித்தேன்!
பிழைத்தேன் செழித்தேன் தழைத்தேன்!

வாணி ஜெயராம்:
கண்கள் ரெண்டும் வைரத் துண்டு
கைகள் ரெண்டும் அல்லிச் செண்டு
அதில் தேன் எடுத்தேன் சுவைத்தேன்

சுசீலா:
பட்டம் கட்டும் மன்னன் என்று
கப்பம் கட்ட முத்தம் ஒன்று கொடுத்தேன்
மலர்த்தேன் குவித்தேன்!

வாணி ஜெயராம்:
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!

சுசீலா:
முத்துப் பிள்ளை உன்னை இன்று அடைந்தேன்
மகிழ்ந்தேன் மிதந்தேன் பறந்தேன்!
முத்துப் பிள்ளை உன்னை இன்று அடைந்தேன்
மகிழ்ந்தேன் மிதந்தேன் பறந்தேன்!

வாணிஜெயராம்:
பத்துத் திங்கள் அன்புத் தவம் இருந்தேன்
மெலிந்தேன் நலிந்தேன் தளர்ந்தேன்!
பத்துத் திங்கள் அன்புத் தவம் இருந்தேன்
மெலிந்தேன் நலிந்தேன் தளர்ந்தேன்!

சுசீலா:
பட்டு வைத்த கன்னம் ரெண்டு
தொட்டு வைத்த சின்னம் ஒன்று
பதித்தேன் அதில் தேன் குடித்தேன்!

வாணி ஜெயராம்:
பஞ்சு மெத்தை நெஞ்சிலிட்டு
அஞ்சுகத்தைக் கொஞ்சவிட்டு
அணைத்தேன் ரசித்தேன் சிரித்தேன்!

சுசீலா:
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!

இருவரும்:
ஆரீராரிரோ ஆரீராரிரோ
ஆரீராரிரோ ஆரீராரிரோ

கோகுலத்தில் சீதை : எந்தன் குரல் கேட்டு...!





எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே நண்பனே...
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்வேன்
நண்பனே நண்பனே நண்பனே...

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா

ல ல லா ல ல லா........

இரவென்றும் பகலென்றும்
உனக்கில்லையே...
இளங்காலை பொன்மாலை
உனக்கில்லையே....
மது வென்னும் தவறுக்கு
ஆளாகிறாய்....
அதற்காக நியாயங்கள்
நீ தேடுகிறாய்
ஆயிரம் பூக்களில்
ஆனந்தம் காண்கிறாய்
நிறங்களே வேற்றுமை
நினைத்திடு நண்பனனே....
மது கிண்ணம் தலை எடுத்து
பெண்ணை விலைக்கொடுத்து
நீ மூடுவாய்.....

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா

ல ல லா ல ல லா........

வரவின்றி செலவானால்
தவறில்லையே
வாழ்நாட்கள் செலவானால்
வரவில்லையே
நேற்றோடும் இன்றோடும்
நீயில்லையே
நாளை உன் கையோடு
உனக்கில்லையே
யாரிடம் தவறு இல்லை
யாரிடம் குறை இல்லை
தூக்கமே நிம்மதி
தூங்கிடு நண்பனே.....
நீ கடந்த காலங்களை
களைந்து எறிந்துவிடு
விழி மூடுவேன்........

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே.. நண்பனே ...நண்பனே...
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்வேன்
நண்பனே... நண்பனே... நண்பனே...

தென்றல் - வணக்கம் வணக்கம் வணக்கம்



வணக்கம் வணக்கம் வணக்கம்
நான் வாழும் பூமிக்கு வணக்கம்
இருக்கோ இல்லையோ தெரியாது
ஓரு வேளை இருந்தா சாமிக்கும் வணக்கம்
குத்த வெச்சு கூத்து பார்க்கும் உங்களுக்கு வணக்கம்
உச்சியிலே வந்து பார்க்கும் நிலாவுக்கும் வணக்கும்
பரம்பரை சொல்லித் தந்த பாட்டுக்கும் தான் வணக்கம்
நான் பறை கொட்ட தோலு தந்த மாட்டுக்கும் தான் வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்

புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவக்கோனே
ஏன் ரத்தமெல்லாம் தீ பிடிக்கும் தாண்டவக்கோனே
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவக்கோனே
என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவக்கோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவக்கோனே
என் பழையகாலம் தெரியுதடா தாண்டவக்கோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவக்கோனே
என் பழையகாலம் தெரியுதடா தாண்டவக்கோனே

(ஹேய்…புத்தம் புது... )

ஏய் மாட்டு வால புடிச்சி மாடக் குளம் கடந்து
தாமரை பூ பறிச்சுத் தந்தேனய்யா என் மச்சினிக்கு
ஆ மஞ்சுவிரட்டுக்குள்ள மயிலக் காளை அடக்கி
தங்கச் செயின் எடுத்து தந்தேனய்யா என் தங்கத்துக்கு
என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு ஆலமரப் பொந்துக்குள்ள
ஆதியில புடிச்ச கிளி பாதியில பறந்திருச்சே
என் பச்சகிளி அது பறந்த பின்னே
நான் ஒத்த கிளி நாளை செத்த கிளி
தந்தன… தந்தன…தந்தன… தந்தன…
தந்தன… தந்தன…தந்தன… தந்தன…

ராஜா டாக்கீஸுக்குள்ள ரகசியமா நான் குதிக்க
பாஞ்சு புடிச்சானே பாலயத்தான் – அந்த ரங்கசாமி
நேத்து நனவாக நாளை கனவாக
இன்று என் காலடியில் நழுவுதடா, மனம் உருகுதடா
வந்த தேதி சொன்னதுண்டு, வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு
போகும் தேதி எந்த தேதி, ஊரில் யாரும் சொன்னதுண்டா
போகும் தேதி என் போல் கண்டார் உண்டா
அதைக் கண்டுகொண்ட நானும் கடவுள் தாண்டா

பறை பறை பறை பறை பறை பறை பறை பறை…
விலங்கு விரட்ட பிறந்த பறை
கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை
கடைசி தமிழன் இருக்கும் வரை
காதில் ஒலிக்கும் பழைய பறை
வீர பறை வெற்றி பறை போர்கள் ஒலிக்கும் புனித பறை
கயிறு கட்டி கடலின் அலையை நிறுத்த முடியுமா
விரலை வெட்டி பறையின் இசையை ஒடுக்க முடியுமா
இது விடுதலை இசை, புது வீறு கொள் இசை
வேட்டையாடி வாழ்ந்த எங்கள் பாட்டனின் இசை

என் பாட்டன் முப்பாடன்களோடு போய் சேரப் போறேன்
இப்ப நான் மறுபடியும் அம்மா கர்ப்பப் பையிலே படுத்துகிட்டேன்
எல்லாரும் அம்மவோட வயித்துக்குள்ளே இருக்குறப்போ தெரியுமாமே
ஓரு இருட்டு, அது இப்ப எனக்குத் தெரியுது
கதகதப்பா இருக்கு, நான் மறுபடியும் பொறந்து வருவேண்டா
பத்திரமா பாத்துக்கங்க என் பறையை…
என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் தாண்டவக்கோனே
என் தப்பு சத்தம் கேட்டிடுமா தாண்டவக்கோனே

படம் : தென்றல்
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : புஷ்பவனம் குப்புசாமி, SP பாலசுப்ரமணியம்

சொட்ட சொட்ட நனையுது



Get Your Own Hindi Songs Player at Music Plugin

அடி நீ எங்கே அடி நீ எங்கே
அடி நீ எங்கே அடி நீ எங்கே
அடி நீ எங்கே

சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையொன்னு குடையொன்னு தா கிளியே
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே
மழைத் தண்ணீ உசிரைக் கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹாலை
கட்டிக் கொடுத்தவனும் நாந்தானே

அடியே நீ எங்கே நீ எங்கே
கண்ணீரிலே மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே நீ எங்கே
கண்ணீரிலே மழையும் கரிக்குதே
(சொட்ட..)

உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய்
எனைக் கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையில் ஆடிடு மயிலே மயிலே
உன் நாணம் என்ன கண்ணே
மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும் கண்ணே கண்ணே
நீருக்கும் நமக்கும் ஒரு தேவ பந்தம் அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை மீண்டும் மழை சேர்த்தது
(சொட்ட..)

படம்: தாஜ் மஹால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்

Thursday, July 23, 2009

அயன் - பளபளக்குற பகலா நீ



பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால்
இனிமை இல்லை
கூட்டை தான் தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால்
வானமே இல்லை
வானவில்லை போலே இளமையடா
தினம் புதுமையடா அதை அனுபவிடா
காலம்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா

பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

எட்டித்தொடும் வயது இது
ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்
அதிசயம் என்னவென்றால்
அதன் இருபக்கம் கூரிருக்கும்
கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூரியனில் செடி முளைக்கும்
புலன்களை அடக்கி வைத்தால்
தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்
காலில் குத்தும் ஆணி
உன் ஏணி என்று காமி
பல இன்பம் அள்ளிசேர்த்து ஒரு
மூட்டை கட்டி வா நீ வா நீ வா

பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

இதுவரை நெஞ்சிலிருக்கும் சில
துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து
தொடுவானம் வரை போய் வருவோம்
அடைமழை வாசல் வந்தால்
கையில் குடையின்றி வா நனைவோம்
அடையாளம் தான் துறப்போம்
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்
என்ன கொண்டு வந்தோம்
நாம் என்ன கொண்டு போவோம்
அட இந்த நொடி போதும்
வா வேற என்ன வேண்டும் வேண்டும்

பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால்
இனிமை இல்லை
கூட்டை தான் தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால்
வானமே இல்லை
வானவில்லை போலே இளமையடா
தினம் புதுமையடா அதை அனுபவிடா
காலம்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா

படம் : அயன்
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஹரிஹரன்

ராமன் தேடிய சீதை - வானத்தை விட்டு விட்டு




வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன
வானத்தை விட்டு விட்டு பயணங்கள் நீழ்வதென்ன
தாகத்தை விட்டு விட்டு தண்ணீரின் தேவை என்ன
என்னை மட்டும் நிற்க விட்டு பூமி இங்கு சுத்துவதென்ன
கண்கள் ரெண்டை கட்டிவிட்டு காண சொல்லும் காட்சி என்ன
(வானத்தை..)

வான் வெளியில் பாட்டு வரும் எனது பாடல் எதுவோ
வீதியெல்லாம் பூக்கடைகள் எனது பூவும் எதுவோ
கோயிலே தீப விழா எனது தீபம் எதுவோ
மாதமெல்லாம் கடற்கரையில் எனது தடமும் எதுவோ
தேடித் தேடி தேய்ந்து போனேன் தேடல் என்று தீருமோ
காணல் நிழல் ஆசை விதை தேடி என்ன லாபமோ
(வானத்தை..)

காகிதமாய் நான் இருந்தேன் கவிதை எழுதி பழக
நான் அழுதும் வேளையிலே மொழிகள் யாவும் தயங்க
தூரிகையாய் நான் இருந்தேன் அழகை நானும் வரைய
நான் வரையும் வேசியில் நிறங்கள் ஓடி ஒழிய
வேறு வேறு வேஷம் போட்டேன் கனவில்லை யாருமே
மேலும் மேலும் சோர்ந்து போனேன் மாறவில்லை கோலமே
(வானத்தை..)

படம்: ராமன் தேடிய சீதை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: திப்பு

Wednesday, July 22, 2009

கன்னத்தில் முத்தமிட்டால் - சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி



ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா
அமுதாவை கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா

சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
ஹே.. நச்சரிக்கும் சிட்டுக்குருவி
ஹே.. ரெக்கை கட்டி பறக்கும் அருவி
ஹேஹேஹேஹேஹேஹே
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
ஹே.. ஹே..
கல்லை கூட கனிய வைத்து பல்லை காட்டி சிரிக்க வைக்கும்

ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா
அமுதாவை கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா
ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா
அமுதாவை கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா

சின்ன சின்ன குறும்புகள் திட்டமிட்டு புரிகிறாள்
பொங்கி வரும் கோபத்தை புன்னகையில் துடைக்கிறாள்
கன்னக்குழியில் கவலை புதைப்பாள்
ஜடையில் ஆகாயம் இழுப்பாள்

இன்பங்களின் எல்லையும் அவளே
தொல்லைகளின் பிள்ளையும் அவளே
நகமுள்ள தென்றலும் அவள்தானே
அலையை பிடித்து கரையில் கரையில் கட்டுவது நடக்கமுடிந்த செயலா
இவளும் கூட ஆட பிறந்த அலையல்லவாஆஆஆஆஆஆ

சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
ஹே.. நச்சரிக்கும் சிட்டுக்குருவி
ஹே.. ரெக்கை கட்டி பறக்கும் அருவி
ஹேஹேஹேஹேஹேஹே

பல்முளைத்த பட்டாம்பூச்சி கன்னத்தை கடிக்குமே
பாசத்தோடு முத்தம் தந்து பரிசும் கொடுக்குமே
அன்னை அன்னை அவளுக்கே அன்னை கூட இவள்தானே
மகளென்று வைத்திருக்கும் மாமியாரும் இவள்தானே

பள்ளி வகுப்பில் வில்லி இவளே
படிப்பில் ஹீரோயின் இவளே
ஆயிரம் கேள்விகள் எறிவாள்
அவள் மட்டும் விடைகள் அறிவாள்
டீச்சருக்கு வீட்டில் வகுப்பெடுப்பாள்

இவளை நாளை மணக்கப்போகும் அசடு என்ன பாடு படுவான்
இவள் பாதம் கழுவும் நீரில் சமயல் செய்வான்
நோ நோ நோ நோ நோ நோ நோ
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
ஹே.. ஹே..
கல்லை கூட கனிய வைத்து பல்லை காட்டி சிரிக்க வைக்கும்

படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
இசை : AR ரஹ்மான்
பாடியவர்கள் : சுஜாதா, ஹரிஹரன், திப்பு, கார்த்திக், மதுமிதா
பாடல் வரிகள் : வைரமுத்து

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேன்கிண்ணத்தின் சூறாவளி .:: மை ஃபிரண்ட் ::. ற்காக சுஜாதா பாடிய இந்த பாடல் ஸ்பெஷலாக டெடிகேட் செய்யப்படுகிறது :-)

நினைத்தாலே இனிக்கும் - நண்பனை பார்த்த தேதி மட்டும்



நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டிக்கொண்டது என் ஞாபகத்தில்
என்னுயிர் வாழும் காலமெல்லாம்
அவள் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்
உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்
என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மறவாதே
(நண்பனை..)

சிறகு இல்லை வானம் இல்லை
வெறும் தரையிலும் நாங்கள் பறப்போம்
இளமை இது ஒரு முறைதான்
துளி மிச்சம் இல்லாமல் இசைப்போம்
கவலை இல்லை கபடம் இல்லை
நாங்கள் கடவுளுக்கே வரம் கொடுப்போம்
எரிமலையோ வெறும் மழையோ
எங்கள் நெஞ்சை நிமிர்த்திதான் நடப்போம்
வரும் காலம் நமதாகும்
வரலாறு படைப்போம்
உறங்காமல் அதற்காக உழைப்போம்
(நண்பனை..)

விதவிதமாய் கனவுகளை தினம்
நெஞ்சிலே நாங்கள் சுமப்போம்
பயமறியா பருவம் இது
நாங்கள் நினைப்பதெல்லாம் செய்து முடிப்போம்
சுமைகள் என்று ஏதும் இல்லை
இங்கு ஜாதி மதங்களை மறப்போம்
பெண்களென்றும் ஆண்களென்றும்
உள்ள பாகுபாட்டையும் வெறுப்போம்
மழை தூவும் வெயில் நேரம்
அது போலே மனது
மலர் போலே தடுமாறூம் வயது
(நண்பனை..)

படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்: பென்னி தயால்

Tuesday, July 21, 2009

ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு





ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிடுருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு
துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு
புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் திருடத்தான் தெரியல
(ஐயய்யோ..)

வள்ளுவரின் குரளாய் ரெண்டு வரி இருக்கும்
உதட்டை புடிச்சிருக்கு
காதல் மடம் அழகா உதடுகள் நடத்தும்
நாடகம் புடிச்சிருக்கு
உன் மடிசார் மடிப்புகள் புடிச்சிருக்கு
அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு
தினம் நீ கனவில் வருவதனால்
ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு
(ஐயய்யோ..)

காதல் வந்து நுழைந்தால்
போதி மர கிளையில் ஊஞ்சல்
கட்டி புத்தன் ஆடுவான்
காதலிலே விழுந்தால் கட்டபொம்மன் கூட
போர்க்களத்தில் பூக்கள் பறிப்பான்
காலையும் மாலையும் புடிக்கும்முன்னா
இன்று காதல் பாடங்கள் படிக்க வைப்பேன்
காவல்காரனாய் இருந்த உன்னை
இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்
அடடா அடடா புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு
(துணிச்சல் புடிச்சிருக்கு..)
புதியாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் புடிச்சிருக்கு
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு..

படம்: சாமி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், மஹதி

கிழக்குச் சீமையிலே : மானூத்து மந்தையில...



மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே
தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி - அவன்
தங்க கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சுமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமச்சி
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா
வெல்லக் கொடல் வலிச்சா வெல்லப்பூண்டு உரிச்சி
வெல்ல கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
பிள்ளைக்கு தாய்ப்பாலத் தூக்கிக் குடுக்கச்சொல்லு
மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு


ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்
வெள்ளிச்சங்கு செஞ்சா வெளக்கி வெக்க வேணுமுன்னு
தஙத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு

மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

படம் : கிழக்குச் சீமையிலே
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

------------------------------------------------------------------------------
பாடலை விரும்பிக் கேட்டவர்:
கல்லூரியில் உடன்பயின்ற தன் உடன்பிறவாச் சகோதரிக்கு பொண்ணு பிறந்துட்டா என்றவுடன் சந்தோஷத்தில் துள்ளிக்குதிச்ச தாய்மாமா பிரபு
உங்க வாழ்த்துக்களை அவருக்கு தனிமடலிலும் தெரியப் படுத்தலாம் : skpprabhu@gmail.com
தொலை பேசி எண்: +91 9894186762

வாழ்த்துக்கள் தாய்மாமன் பிரபு!

இருவர் - ஹல்லோ மிஸ்டர் எதிர்கட்சி




ஹல்லோ மிஸ்டர் எதிர்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு
பதினெட்டு வயசாச்சு
(ஹல்லோ மிஸ்டர்... )

காதலா காதலா உனை நான் விடமாட்டேன்
கைதலம் பற்றுவேன் பிரிய விடமாட்டேன்
கண்கள் மீதாணை அழகு மீதாணை விடவே விடமாட்டேன்
(ஹல்லோ மிஸ்டர்... )

கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால்
உள்ளத்தில் உலகப்போர் மூளுமே
நீயென்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால்
என் கண்கள் பாலைவனமாகுமே
பருவங்கள் சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும்
துருவங்கள் சந்தித்தால் பிரியாது எந்நாளும்
கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்
(ஹல்லோ மிஸ்டர்... )

மண்ணை வேர்கள் பிரிந்தாலும் விண்ணை நீலம் பிரிந்தாலும்
கண்ணை மணிகள் பிரிந்தாலும் உனை நான் பிரியேன்
சங்கம் தமிழைப் பிரிந்தாலும் சத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும் உனை நான் பிரியேன்
உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாளோ
உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ
உன்னைப் பார்த்த நாள்தான் பொன்னாளோ
(ஹல்லோ மிஸ்டர்... )

படம் : இருவர்
இசை : ஏ ஆர் ரஹ்மான்
பாடியவர் : ஹரிணி

Monday, July 20, 2009

காதல் சொல்வது உதடுகள் அல்ல



காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல கவிதைகள் தலைவா
கவிதை என்பது புத்தகம் அல்ல பெண்கள் தான் சகியே
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல நீ மட்டும் சகியே

அடடா இன்னும் என் நெஞ்சம் புரியலையா காதல் மடையா
இது என்னடி இதயம் வெளியேறி அலைகிறதே காதல் இதுவா
எப்படி சொல்வேன் புரியும் படி ஆளைவிடுடா
மன்னிச்சுக்கடி காதல் செய்வேன் கட்டளைப்படி
(காதல்..)

படப்படக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும் சொல்வது சரியா
தவறு செய்தால் முத்தம் தந்து என்னை திருத்திக்கணும் தண்டனை சரியா
எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லிவிடுடா
சொல்லுகிறேன் இப்போது முத்தம் கொடுடி
(காதல்..)

படம்: பத்ரி
இசை: ரமண கோகுலா
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சுனிதா

Sunday, July 19, 2009

ஏஞ்சல் வந்தாளே





ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு
(ஏஞ்சல்..)

உன் கூந்தல் வகுப்பில் லவ் பாடம் படிக்கும் மாணவனாக இருந்தேனே
உன் மேனி அழகை ஆராய விஞ்ஞானி போல் இன்று ஆனேனே
எல்லாம் சக்ஸஸ் தான் ஆஹா
இனிமேல் கிஸ் கிஸ் தா வா வா வா
என் வானம் சுழலும் என் பூமி எல்லாமே நீதானே ஹே வா வா வா

நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை
நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே
நெஞ்சுக்குள் வைத்திருந்த உறவொன்றை
சொல்லும்முன் அறிந்தாயே நன்றி உயிரே
உந்தன் மார்பில் படர்ந்துவிட வா
உந்தன் உயிரில் உறைந்து விட வா உறவே உறவே
(நீருக்குள்..)
(ஏஞ்சல்..)

படம்: பத்ரி
இசை: ரமண கோகுலா
பாடியவர்கள்: தேவிஸ்ரீ பிரசாத், சித்ரா

Saturday, July 18, 2009

மாலை நேரம் மழை தூறும் காலம்

blogger சோம்பேறி தன் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருடைய விருப்பப்பாடலாக இங்கே இப்பாடல் . பிறந்தநாள் வாழ்த்துக்கள் சோம்பேறி..

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே


ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..


உன் கரம் கோர்க்கையில்
நினைவு ஓர் ஆயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்னை இழந்தேன் என


ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..


ஒரு முறை
வாசலில்
நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன?
இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்து கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன?
என் தேடல்கள் நீ இல்லை
உன் கனவுகள் நான் இல்லை
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன?

(மாலை நேரம் மழைத்தூறும் )
(ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது)



இசை: GV ப்ரகாஷ்
திரைப்படம்: ஆயிரத்தில் ஒருவன் (2009)
பாடியவர்: அண்ட்ரியா

தங்க மகன் இன்று சிங்க நடை





தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எறியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்
(தங்க..)
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத்தாழ்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதே
ரத்தத் தாமரை முத்தம் கேட்குது வா என் வாழ்வே வா
(தங்க..)

சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலைமேனி
அது மஞ்சம் தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி
ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மகராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீ தா மருதாணி
பிறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென் பாண்டி தென்றல் திறந்தாக வேண்டும்
என்ன சம்மதமா இன்னும் தாமதமா
(தங்க..)

தூக்கம் வந்தாலே மனம் தலையணை தேடாது
தானே வந்த காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்க்காது
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மன வானில் விழ வேண்டும் விழி தான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
எனை மாற்றீ விடு
இதழ் ஊற்றிக் கொடு
(தங்க..)

படம்: பாட்ஷா
இசை: தேவா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், சித்ரா

Friday, July 17, 2009

பாட்ஷா பாரு பாட்ஷா பாரு

பாட்ஷா பாட்ஷா பாட்ஷா பாட்ஷா
ஹேய் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பட்டாளத்து நடையப்பாரு பகை நடுங்கும் படையப்பாரு
கோட்டு ஷூட்டும் ரெண்டும் எடுத்து
போட்டு நடக்கும் புலியப் பாரு
காற்றில் எறியும் நெருப்பைப்போல சுட்டெறிக்கும் விசியைப் பாரு
நாற்றம் வேர்வை ரெண்டும் கொண்ட
ராஜாங்கத்தின் மன்னன் தானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா

பாட்ஷா பாட்ஷா பாட்ஷா பாட்ஷா
ஹேய் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பாச்சா என்னைக்கும் பலிக்கும் பாரு
பாட்ஷா திட்டம் ஜெயிக்கும் பாரு
பம்பாயில் இவன் பேர சொன்னா
அரபிக் கடலும் அலறும் பாரு
கள்ளிப் பயல்கள் சதியை எல்லாம்
சொல்லி அடிக்கும் சூரன் பாரு
நூறு முகங்கள் மாறி வந்தும்
ஏறு முகத்தில் இருக்கும் வீரந்தான்
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா

படம்: பாட்ஷா
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்




உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
ஹ்ம்ம்..இன்று நேற்று
என்று இல்லை என் இந்த நிலை
ஹ்ம்ம்..உன்னை கண்ட
நாளின்றே நான் செய்யும் பிழை
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய

உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்து நிலவை அழைக்கும்
இதழில் விரிந்து குளிர்க்கும்
என் இரவினை பனியில் நனைக்கும்
எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே
ஒரு முறை அல்ல முதல் முறை அல்ல
தினம் தினம் என்னை சுழும் தீ

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய

முதல் நாள் பார்த்த வனப்பு
துளி குறையவும் இல்லை உனக்கு
உறக்கம் விழிப்பில் கனவாய்
உனை காண்பதே வழக்கம் எனக்கு
அருகினிலே வருகையிலே
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்
முதல் முதல் இன்று
நிகழ்கிறதென்று நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போஸ்
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய

ஹ்ம்ம்..இன்று நேற்று
என்று இல்லை என் இந்த நிலை
ஒஹோ..ஹ்ம்ம்..உன்னை கண்ட
நாளின்றே நான் செய்யும் பிழை

படம் : பச்சை கிளி முத்துச்சரம் (2007)
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் :கெளதமி ராவ், ரோபி
வரிகள் : தாமரை

சமயபுரத்தாளே சாட்சி : சமயபுரத்து நாயகியே....!



சமயபுரத்து நாயகியே
சமயத்தில் காக்கும் நாரணியே!
காரணியே பவ தாரணியே அன்னபூரணியே!

வேப்பஞ்சேலை உடுத்திய பேருக்கு
காப்பாய் நிற்கும் தயவல்லவோ?!
உரியவர்கருளும் பெரியபாளையத்
திருநகர் வாழும் தாயல்லவோ?!
கேட்டை களையும் கோட்டை மாரியாய்
சேலத்தில் வளரும் சுடரல்லவோ?!
பால் குடம் பொங்கல் படைப்பவர்க்குதவும்
கோலவிழி அம்மன் அவளல்லவோ?! (சமயபுரத்து)

ஆடித் தேர் கொண்டு அழகாய் வலம் வரும்
வேற்காடமர்ந்த அருளல்லவோ?!
ஆலயம் மன்ன திருப்பெயர் விளங்க
அருமறை பாடும் பொருளல்லவோ?!
தருமத்தைக் காப்பாள் துயர்களைத் தீர்ப்பாள்
துர்க்கை பவானி அவளல்லவோ?!
கருமத்தி நீக்கி கவலையைப் போக்கி
கை கொடுக்கும் குளிர் நிழலல்லவோ?!

சிம்ம வாஹினி! ஜகன் மோகினி! தர்ம ரூபினி! கல்யாணி!
கமல வாசினி! மந்தஹாசினி! கால பயங்கரி! காமாக்ஷி!
மாலினி சூலினி ஜனனி ஜனனி சங்கரி ஈச்வரி மீனாக்ஷி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
சர்வத்திற்கும் இங்கு நீ சாட்சி!
சமயபுரத்தாளே சாட்சி!

நன்றி : அம்மன்பாட்டு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு



புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே - சனம்
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா - இது
நாடா இல்லே வெறும் காடா? இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்?
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு வாழும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே

ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது?
தானாகப் பாதை கண்டு நடக்குது
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது?
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா?
கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதைக்
கேக்க யாரும் இல்லே தோழா

படம் : உன்னால் முடியும் தம்பி (1988)
இசை : இளையராஜா
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
வரிகள் : புலமைபித்தன்

மூன்று முடிச்சி : ஆடி வெள்ளி தேடி உன்னை


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆண்:
ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்

பெண்:
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்

ஆண்:
வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்

பெண்:
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்

ஆண்:
சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!

பெண்:
காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் - கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்

படம்: மூன்று முடிச்சு
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன்+வாணிஜெயராம்

நன்றி : சந்திரவதனா

இப்பாடலை விரும்பிக்கேட்டவர் : எழுத்தோசை தமிழரசி


1976ல் வந்த இந்தப் பாடலைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு:
அந்தாதி முறையில் அமைந்த பாடலிது!

அறியத்தந்த ஷைலஜா அக்காவிற்கு நன்றி

Thursday, July 16, 2009

ஸ்டைலு ஸ்டைலுதான்





ஹேய் ஸ்டைல் ஸ்டைல்

ஸ்டைலு ஸ்டைலுதான் இது சூப்பர் ஸ்டைலுதான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்
ஹோய் டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சுமீ
ஓ கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ
ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி

பிகநு பிகருதான் நீ சூப்பர் பிகருதான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானுதான்
ஆ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சுமீ
கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ
ஏழு மணிக்கு மேல நீயும் இன்பலட்சுமி
(ஸ்டைலு..)

காதலிச்சா கவிதை வரும் கண்டு கொண்டேன் பெண்ணாலே
கருப்பும் ஓர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே
எங்கெங்கே ஷாக் அடிக்கும் அறிந்துக்கொண்டேன் பெண்ணாலே
எங்கெங்கே தேள் கடிக்கும் தெரிந்து கொண்டேன் உன்னாலே
காஷ்மீர் ரோஜாவே கைக்கு வந்தாயே
மோந்து பார்க்கும் முன்னே முள்ளெடுத்து குத்தாதே
அழகு ராஜாவே அவசரம் ஆகாதே
மொட்டு மலரும் முன்னே முட்டி முட்டி சுத்தாதே
அடி ராத்திரி வரவே என் ரகசிய செலவே
ஒரு காத்தடிக்குது சேத்தணைக்கணும் காத்திரு நிலவே
(ஸ்டைலு..)

பச்சரிசி பல்லழகா வாய் சிரிப்பில் கொல்லாதே
அழகு மணி தேரழகி அசைய விட்டு கொல்லாதே
நெத்தி தொடும் முடியழகா ஒத்தை முடி தாராயோ
கட்டை மலர் குழலழகி ஒத்தை மலர் தாராயோ
அங்கே தீண்டாதே ஆசை தூண்டாதே
சும்மா கிடந்த சங்க ஊதி விட்டு போகாதே
ஊடல் கொள்ளாதே உள்ளம் தாங்காதே தலைவி
காய்ச்சன் கொண்டால் தலையணையும் தூங்காதே
அட கெட்டது மனசு வந்து முட்டுது வயசு
உன்ன பார்த்த பொழுது வேர்த்த
பெண்களில் நானொரு தினுசு
(ஸ்டைலு..)

படம்: பாட்ஷா
இசை: தேவா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

நாடோடிகள் - சம்போ சிவ சம்போ



சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் துணிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொறுங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும் !

சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ

நீ என்ன நானும் என்ன
பேதங்கள் தேவை இல்லை
எல்லோரும் உறவே என்றால்
சோகங்கள் ஏதும் இல்லை
சிரிக்கின்ற நேரம் மட்டும் நட்பென்று தேங்கிடாதே
அழுகின்ற நேரம் கூட நட்புண்டு நீங்கிடாதே
தோல்வியே என்றும் இல்லை
துணிந்தபின் வலி இல்லை, வெற்றியே !

சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ

உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் துணிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொறுங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும்

சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ

ஏக்கங்கள் தீரும் மட்டும் வாழ்வதா வாழ்க்கையாகும்
ஆசைக்கு வாழும் வாழ்க்கை ஆற்றிலே கோலமாகும்
பொய்வேடம் வாழ்வதில்லை மண்ணோடு வீழும் வீழும்
நட்பாலே ஊரும் உலகும் எந்நாளும் வாழும் வாழும்
சாத்திரம் நட்புக்கில்லை
ஆத்திரம் நட்புக்குண்டு.. காட்டவே !!!

சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ

எரியும் விழிகள் உறங்குவதென்ன
தெரியும் திசைகள் பொசுங்குவதென்ன
முடியும் துயரம் நிகழுவதென்ன
நெஞ்சில் நிழலென்ன
மறையும் பொழுது திரும்புவதென்ன
மனதை பயமும் நெருங்குவதென்ன
இனியும் இனியும் தயங்குவதென்ன
சொல் சொல் பதிலென்ன

சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ

படம் : நாடோடிகள்
இசை : சுந்தர். சி. பாபு
பாடியவர் : சங்கர் மகாதேவன்
பாடல் வரிகள் : யுகபாரதி

Wednesday, July 15, 2009

இத்துணூண்டு முத்ததில இஷ்டம் இருக்கா





இத்துணூண்டு முத்ததில இஷ்டம் இருக்கா
இல்ல இங்கிலீஸு முத்ததில கஷ்டம் இருக்கா
இஞ்சு இஞ்சா முத்தம் வைக்க இஷ்டம் இருக்கா
இல்ல கொஞ்சு முத்தம் வைப்பதிலே கஷ்டம் இருக்கா
கண்ணுல கத்தி சண்டை கையில கம்பு சண்டை
கன்னத்தில் முத்தச் சண்டை வரியா வரியா
மொத்தத்தில் இந்த சண்டை நிக்காத குத்துச் சண்டை
ஒத்தைக்கு ஒத்தையா நீ வரியா வரியா
ஏய் நீ நீ நீ நீ என்னோட இஷ்டம்
ஏய் நீ நீ நீ நீ இல்லாம கஷ்டம்

ரொம்பவும் மெத மெதுன்னு உன்னோட
வளைவு நெளிவ எவன் செஞ்சான்
சீ சீ சீ எப்பவும் துரு துருன்னு எம்மேல
குறும்பு பண்ண எவன் செஞ்சான்
ஆத்தாடி அத்தரிக்காடு அங்கங்க பூத்திருச்சி
காட்டாறு வந்த வேகம் காடெல்லாம் பத்திக்கிச்சு
ஏய் வை வை வை எம் மேலே கை வை
ஏய் மை மை மை நீதானே ஆண்மை
(இந்த..)

பனிமேடு ஓரம் உன்னோட கொழுப்புச் சத்து கூப்பிடுது
கொழுப்பு சத்தெல்லாம் உன்னோட மீசை வந்து சாப்பிடுது
யாழ்பாணம் கப்பல் இப்ப தரையில் லேசா தட்டியது
ஏய் சா சா சல்சா அழவிட்ட முழுசா
ஏய் குல்சா குல்சா ஒதுங்கிற நைசா
(இந்த..)

படம்: தூள்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: உதித் நாராயணன், சௌமியா

மறுபடியும் - எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு



எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே

வினாக்களும் கனாக்களும் வீனாக ஏன்
பொன்னாள் வரும் கை கூடிடும் போராட்டமே
நாளை என்றோர் நாளை நம்புங்கள்
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே

மண்மீதிலே எந்த ஜீவனுக்கும்
அளவில்லாத ஆசைகள்
ஒன்றல்லவே ஓராயிரத்தை
தாண்டி நிற்க்கும் தேவைகள்
மண்மீதிலே எந்த ஜீவனுக்கும்
அளவில்லாத ஆசைகள்
ஒன்றல்லவே ஓராயிரத்தை
தாண்டி நிற்கும் தேவைகள்

நினைத்தது நடப்பது எவன் வசம்
அணைத்தையும் முடிப்பது அவன் வசம்
தெய்வம் என்ற ஒன்றை நம்புங்கள்
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே

எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே

படம் : மறுபடியும்
இசை : இளையராஜா
பாடியவர் : KJ.ஜேசுதாஸ்

Tuesday, July 14, 2009

தூக்கமும் கண்களை தழுவட்டுமே




வணக்கம் தேன் கிண்ண நேயர்களே, இதோ மீண்டும் ஒரு பழைய சாதம் பாடல் பட்டியலை பாருங்கள் தொகுப்பாள திரு.சூரியகாந்தன் காந்தக்குரலில் மனதை வருடும் மீண்டும் ஒரு மயிலிறகு ஒலித்தொகுப்பை கேட்டு மகிழுங்கள். இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.சூரியகாந்தன் அவர்களுக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.

1.மன்னவனே அழலாமா,கற்பகம்,பி.சுசீலா >> 2.தாயின் மடியில் தலை,தாயின்மடியில்,டி.எம்.எஸ்,வாலி >> 3.கன்னண் வருவான், >> 4.நீதியே நீயும் இன்னும் , பூம்புகார்,ஆர்.சுதர்ஸ்னம்.கே.பி.சுந்தராம்பாள்,மாயவநாதன், >> 5.சிங்கார புன்னகை,மகாதேவி >> 6.செல்லக்கிளிகலாம்,எங்கமாமா,கண்ணதாசன்,டி.எம்.எஸ்
7.கண்கள் இரண்டும்,மன்னாதிமன்னன்,எம்.எஸ்.வி.ராமமூர்த்தி,பி.சுசீலா
8.பாலும் பழமும்,டி.எம்.எஸ்,எம்.எஸ்.வி.ராமமூர்த்தி >> 9.தூக்கமும் கண்களை தழுவட்டுமே, எஸ்.ஜானகி.

Get this widget | Track details | eSnips Social DNA

லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே



லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே
ராட்சசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அணல் வெளியோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஓடுறீயே தொட்டாச்சிணுங்கி பெந்தானோ
அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி
(அடி லஜ்ஜாவதியே..)

பூவரச இலையிலே பீப்பி செஞ்சு ஊதினோம்
பள்ளிக்கூட பாடம் மறந்து பட்டாம் பூச்சி தேடினோம்
தண்ணிப்பாம்பு வரப்பில் வர தலைதெறிக்க ஓடினோம்
பணங்காயின் வண்டியில் பசு மாட்டு தொழுவத்தை
சுற்றி வந்து பப்பாய்க்கு போனதாக சொல்லினோம்
அடடா வசந்தம் அது தான் வசந்தம்
மீண்டும் அந்தக் காலம் வந்து மகிழ்ச்சியாக மாறுமா

Baby dont you ever leave
I'm your don raja
Come on anytime You are my dilruba
I can never stop this feel in
I'm your don raja
yeah Hey Hey

Baby run your body with this freaky thin
and I wont let you go
and I wont let you down through the fire
through the limit
To the wall to just to be with you
I'm gladly risk it all
Ha let me do it one more time
do it one more time
Ha baby come on and
lets get it into the party

காவேரி நதியிலே தூண்டில்கள் போட்டதும்
கண்ணே உன் தூண்டில் முள்ளில் குட்டித்தவளை விழுந்ததும்
கை கொட்டி கேலி செய்த ஞாபகங்கள் மறக்குமா
கட்டை வண்டி மையினால் கட்ட பொம்மன் மீசையை
கண்ணே நீ வரைந்து விட்டு ராஜ ராஜன் என்றதும்
அடடா வசந்தம் அது தான் வசந்தம்
காலம் கடந்து போன பின்னும்
காதல் கடந்து போகுமா
(அடி லஜ்ஜாவதியே..)

படம்: 4 ஸ்டூடண்ஸ்
இசை: ஜாஸ்ஸி கிஃப்ட்
பாடியவர்: ஜாஸ்ஸி கிஃப்ட்

Monday, July 13, 2009

துண்டை காணோம் துணிய காணோம்



துண்டை காணோம் துணிய காணோம்
துண்டை காணோம் துணிய காணோம்
தூங்கும் போது மணிய காணோம்
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
தொடாமலே தூக்குறியே பொடாவுல போடுறியே
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
குவாட்டர் அடிச்சேன் ஃபுல்லு அடிச்சேன் போதை ஏறல
உருண்டு படுத்தேன் பொறண்டு படுத்தேன் தூக்கம் போதல
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச

நீ சிரிச்சா புது காவேரியும் இங்கே சுரக்கும்
நான் அணைச்சா அந்த நெய்வேலிக்குள் ஷாக்கு அடிக்கும்
இளநீர் குலையே என்ன இம்சை பண்ணுறியே
இளமை புயலாய் வந்து இடுச்சுத் தள்ளுறியே
நான் புயலிருக்கும் கேக்குடா
ஒடச்சிடாம தூக்குடா
தெகட்டும் வரை தின்னுடா நீ நீ நீ
சினேகிதனே என்ன சிந்தனைடா
மனசுக்குள்ளே எந்தன் தேவதைடா
ஓ சாத்து சாத்து சாத்துங்கடா
என்னை இழுத்து போத்துங்கடா
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
(துண்டை..)

வா திருடா நான் வாலிபத்தின் வாசப்படிடா
டா அடடா இவ டாட்டா தயாரிப்பாடா
சரியோ தவறோ வந்து தவுலு வாசிங்கடா
சலிக்கும் வரைக்கும் என்ன சல்லடையாக்குங்கடா
சும்மா சுறுக்குனு தான் கிள்ளுற
சுவிங்கமாக்கி மெல்லுற
ஒரசுரியே உசுப்புரியே நீ நீ நீ
சையோ சையடா எனக்கு சைவம் வேணாம்டா
ஹையோடா டையோடா இப்ப அதிகம் வேணாம்டா
தேக்கு தேக்கு தேக்கு மரம்
பாக்க பாக்க பாக்க ஆசை வரும்
(துண்டை..)

படம்: தேவதையை கண்டேன்
இசை: தேவா
பாடியவர்கள்: தனுஷ், அனுராதா ஸ்ரீராம்

எங்கிருந்தாய் நான் மண்ணில்



எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்

(எங்கிருந்தாய்...)

நிலவின் பின்புறமாய் நீதான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்

(எங்கிருந்தாய்...)

இதழை சுழிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்காதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்

(எங்கிருந்தாய்...)


படம் : வின்னர் (2003)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : ஹாரீஸ் ராகவேந்திரா
வரிகள் :

Sunday, July 12, 2009

உண்மை வெல்வாய் தமிழா




தமிழா தமிழா தமிழா தமிழா

உண்மை வெல்வாய் தமிழா
உலகை வெல்வாய் தமிழா
இமயமலையை இடுப்பில் கட்டி
இழுத்து வருவாய் தமிழா
(உண்மை..)

தங்க வயல்களும் வெள்ளி நதிகளும்
தமிழன் நாட்டில் வர வேண்டும்
காற்றும் மழையும் தமிழன் சொன்னால்
கைகள் கட்டி தொழ வேண்டும்
செவ்வாய் கிரகம் வரையில் தமிழன்
செல்வாக்கெல்லாம் பெற வேண்டும் வேண்டும்

வாயைக் கட்டி வயித்தை கட்டி வரியை கட்டுகிறாய்
அந்த வரிகள் எங்கே வழிகிறதென்று வழிகள் அறிவாயா
பட்டு வேட்டிகள் வாங்கித்தரவே சுதந்திரம் வந்ததடா
ஆனால் கட்டியிருந்த கோவணம் கூட களவு போனதடா
கருப்புக்கோழி காணோம் என்று
காவல் நிலையம் போன மகள்
கற்பைக் காணோம் காணோம் என்று
கதறிக் கொண்டு திரும்புவதோ
ஜனாபதியும் ரிக்‌ஷாக்காரனும் சட்டத்தின் முன் ஒருவரடா
ஊமை ஜனங்கள் உரிமை பற்றி உணரச் செய்வது கடமையடா
சுதந்திரம் காக்க போராடு சட்டம் தெரிந்து வாதாடு
சுற்று சூழலும் சூழ்ச்சி உடைத்து வெற்றி குளத்தில் நீராடு
தமிழா தமிழா தமிழா தமிழா
(உண்மை..)

படம்: தமிழன்
இசை: D இமான்
பாடியவர்: கார்த்திக்

பாச மலர் - வாராய் என் தோழி வாராயோ



ஆனந்தா.. நான் என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கறேன்
அதுல ஆனந்த கண்ணீர தான் நான் எப்பவும் பாக்கனும்

அது என் கடமை ராஜா.. நீ கவலைப்படாத...

நன்றி ஆனந்தா மிக்க நன்றி !!!
அம்மா.. மஞ்சள் குங்குமத்தோட நீ நீடூழி வாழனும் தாயே

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

மணக்கோலம் கொண்ட மகளே
புது மாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழ பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளை கண்டு மகிழாதோ
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளை கண்டு மகிழாதோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

தனியாக காண வருவார்
இவள் தளிர் போலே தாவி அணைவாள்
கண் போலே சேர்ந்து மகிழ்வாள்
இரு கண்மூடி மார்பில் துயில்வாள்
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

படம் : பாச மலர்
இசை : MS விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் : LR ஈஸ்வரி, MS ராஜேஸ்வரி
பாடல் வரிகள் : கண்ணதாசன்

இன்று திரு.கிரிதரனுடன் திருமண பந்தத்தில் இணையும் ஸ்ரீமதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

Saturday, July 11, 2009

வாடி வாடி வாடி கைப்படாத சீடி



எனக்கு மியூசிக்கை பத்தி என்ன தெரியுமா?
பீட்டரக்காக்கு என்னை பத்தி தெரியல
அபிதேக்கோ சூப்பிஸ்தாணு

வாடி வாடி வாடி கைப்படாத சீடி
தௌஸண்ட் வால்ப் பல்பு போல கண்ணு கூசுதேடி
ஆ அவுத்துவிடும் பாட்டுல பல விசிலு சத்தம் நாட்டில
புரியாத ராகமெல்லாம் தேவையில்ல
அட கேளு கேளு இது கானாப் பாட்டு
நேரா உன் நெஞ்சுக்குள்ள சேரும் பாட்டு
அட டிஸ்கோ வந்தாலும் கிஸ்கோ வந்தாலும்
ஓரம் போகாது இந்த பாட்டு
அட மைக்கேல் வந்தாலும் மடோனா வந்தாலும்
தோத்துப் போகாது தமிழ் கானாப் பாட்டு
(வாடி..)

ஏய் பீட்டட் இன்னா குவாட்டர்
அவ தள்ளிகினு போறது உன் டாட்டர்
ஏய் ராமே கூலு மாமே பேசிக்கிட்டா தப்பில்ல
தொட்டபெட்ட மலையை பக்கம் ஏறாதே
ஏய் பாட்டிலுன்னா குலுக்குடா தியேட்டருன்னா கலக்குடா
சச்சினோட பாலிசி மாறாதே
ஏய் கேளு கேளு இது கானா பாட்டு
கவலைக்கெல்லாம் கப்சா கொடுக்கும் பாட்டு
அட ராக்கும் வந்தாலும் ஜாஸ்ஸு வந்தாலும்
காரம் குறையாது இந்த பாட்டு
ஷேக்கன் ஆகாது தமிழ் கானா பாட்டு

ஏய் கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமு

ஏய் சோமு எதுக்கு ஃபிலிம்மு
நீ நீயாக வாழ்ந்து பாரு மாமு
அட பந்தா எதுக்குடா கொஞ்சம் அடங்குடா
நேட்து வர நாயக்கர் கூட பண்ணுதானே
ஏய் பிகரு மடக்கத்தான் பிட்சா ஹார்ட் கேட்குதா
தாஸ் பார்க் கையேந்தி பவந்தானே
ஏய் கேளு கேளு இது கானா பாட்டு
அட மேதை என்றாலும் பேதை என்றாலும்
வேதம் போலாகும் இந்த பாட்டு
அட குமரி ஆனாலும் கிழவி ஆனாலும்
கூத்தாட வைகும் தமிழ் கானா பாட்டு
(வாடி..)

அட தூள் மாமே இது
இது தமிழ் கானா பாட்டு

படம்: சச்சின்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: விஜய்

Last 25 songs posted in Thenkinnam