Wednesday, November 21, 2007

14. பூவே பூச்சூடவா




பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா

(பூவே)

அழைப்பு மணி இந்த வீட்டில் கேட்டாலும்
ஒடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை வார்த்தேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
தீப தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
இந்த கண்ணில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

(பூவே)

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

(பூவே)


படம்: பூவே பூச்சூடவா
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

4 Comments:

கோபிநாத் said...

\\மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்\\

அருமையான வரிகள் :))

பாசில் இயக்கத்தில் வந்த அருமையான படங்களில் இதுவும் ஒன்று ;)

cheena (சீனா) said...

//நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்//

சின்னக்குயில் சித்ராவின் பாடும் திறன் பாராட்டுக்குரியது

MyFriend said...

சித்ரா பாடியபல அருமையான பாடல்களில் ஒன்று..:-)

//காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
//

//மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்
//

அருமையான வரிகள்..

Anonymous said...

Oh.....romba naal aachu intha paatu kettu.....kodi nandrigal!!

youtube link inga irukku...serthikonga!!

http://www.youtube.com/watch?v=MdGa1hbpusg

Last 25 songs posted in Thenkinnam