Wednesday, November 28, 2007

29. உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்..



ஆ: நெஞ்சில் ஜில் ஜில்..
எனக் காதல் பிறக்கும்..
நெஞ்சே நின்றாலும்
காதல் துடிக்கும்
அழியாது காதல்..
அழியாது காதல்..

ஆ: உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு
விண்மீன்கள் எல்லாம் அங்கே
நாம் வந்த பாத சுவடு

பெ: தீராத தேடல் இது
தித்திக்கும் தூரல் இது..

ஆ: (உனக்காகத்தானே..)

பெ: தேவதைப்போல வந்து காதல் இறங்கும்
அசரிரியாக நின்று பேசி சிரிக்கும்

ஆ: புரியாது பெண்ணே காரணங்கள்
ஜில் ஜில் ஜில் நெஞ்சில்..
த ன னா ன னா...

பெ: வெட்கங்கள் கொடியேற்றி போகும் ஓர் ஊர்வலம்
முத்தங்கள் மாநாடு கொண்டாடும் இதழ் ஓரம்
பொல்லாத ஏக்கங்கள் போடும் ஓர் தீர்மாணம்
பெண் நெஞ்சம் முன் வந்தால் தீர்மாணம் நிரைவேறும்

ஆ: காதலின் ஆட்சிதானே நமக்கு வேண்டும்
பூமியை தூசி தட்டி சுற்ற விடு மீண்டும்
(உனக்காகத்தானே..)

பெ: காதலை தெய்வம் என்று கைகள் வணங்கும்
காதலில் மட்டும்தானே உள்ளம் அடங்கும்

ஆ: சலவைக்கல் சிலையே பூஜிக்க வா..
ரகசிய பூவாய் தனனானனா...

பெ: உன் வாசம் இல்லாமல் பூவாசம் எனக்கேது
அதிகாலை தேநீரில் தித்திப்பு இருக்காது
என் தட்ப வெப்பங்கள் நீ இன்றி குறையாது
பூந்தென்றல் புகை ஆகும் ஸ்வாசிக்க பிடிக்காது

ஆ: பூவுக்கு வெண்ணிலவு பால் ஊட்டும் நேரம்
ஐயய்யோ பூமி எங்கும் ஆனந்தத்தின் ஈரம்
(உனக்காகத்தானே...)

படம்: நெஞ்சில் ஜில் ஜில்
இசை: D. இமான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா

4 Comments:

இராம்/Raam said...

:)

நல்லா வந்திருக்கு...

G.Ragavan said...

:) நல்லாருக்கு

MyFriend said...

ராமண்ணே & மேட்டியண்ணே (G ரா),

நன்றி நன்றி. :-)

நாகை சிவா said...

நல்லாருக்கு...

Last 25 songs posted in Thenkinnam