Thursday, November 29, 2007

31. ஆடாத ஆட்டமெல்லாம்...



ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ளே
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன
நீ கொண்டு போனதென்ன
உண்மை என்ன உனக்கு தெரியுமா?

வாழ்க்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே
வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே
நீயும் நானும் நூறு வருஷம்
இருப்பதில்லையே பாரு
(ஆடாத..)

நித்தம் கோடி சுகங்கள் தேடி
கண்கள் மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும் மேலும்
சேர்த்துக்கொண்டே போகின்றோம்
மனிதன் என்னும் வேடம் போட்டு
மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து
தீமைகளை செய்கின்றோம்
காலம் மீண்டும் திரும்பாதே
பாதை மாறி போகாதே
பூமி கொஞ்சம் குலுங்கினாலே
நின்று போகும் ஆட்டமே..
(ஆடாத..)

ஹேய்.. கருவறைக்குள் காணாத
கற்றுக்கொண்ட சிறு ஆட்டம்
தொட்டிலுக்குள் சுகமாக
தொடரும் ஆட்டமே
பருவம் பூக்கும் நேரத்தில்
காதல் செய்ய போராட்டம்
காதல் வந்த பின்னாலே
போதை ஆட்டமே
பேருக்காக ஒரு ஆட்டம்
காசுக்காக பல ஆட்டம்
எட்டு காலில் போகும்போது
ஊரு போடும் ஆட்டமே..
(ஆடாத..)

படம்: மௌனம் பேசியதே
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்

2 Comments:

நாகை சிவா said...

தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து
தீமைகளை செய்கின்றோம்
காலம் மீண்டும் திரும்பாதே
பாதை மாறி போகாதே
பூமி கொஞ்சம் குலுங்கினாலே
நின்று போகும் ஆட்டமே..//

சூப்பருங்கோ...

Sakthi said...

awesome lines...!

Last 25 songs posted in Thenkinnam