Saturday, November 3, 2007

4. கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே....


Get Your Own Music Player at Music Plugin

பெண் குரல்:- கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை

குழு: தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை

பெண் குரல்: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா

குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா

பெண் குரல்: ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே

குழு: ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே

பெண் குரல்: இது தான் இயற்கை தந்த பாசபந்தமே, கண்ணிழந்த பிள்ளை ஆனால் உன்னை
கண்ணீருக்கும் பேர்கள் கண்டது இல்லை! ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்

குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே அது போல் உயிர் பிறப்பில்!


படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
பாடியது:- லதா ரஜினிகாந்த்
இசை:- இளையராஜா

9 Comments:

G.Ragavan said...

இந்தப் பாடலைப் பாடியது பி.எஸ்.சசிரேகா என்று நினைக்கிறேன். இல்லை.. இல்லை லதா ரஜினிகாந்த் தான். சசிரேகா பாடியது ராஜபார்வை படப்பாட்டு.

இதுவும் ஒரு நல்ல பாட்டு.

MyFriend said...

அருமையான பாடல்.. நான் ரசித்ததில் இதுவும் ஒன்று..

//இது தான் இயற்கை தந்த பாசபந்தமே, கண்ணிழந்த பிள்ளை ஆனால் உன்னை
கண்ணீருக்கும் பேர்கள் கண்டது இல்லை! ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்
//
அருமையான வரிகள்.

கோபிநாத் said...

அருமையான பாட்டு ;)

நாமக்கல் சிபி said...

எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று இராம்!

நன்றி!

Sanjai Gandhi said...

வாவ்..இந்த பாடல் கேட்டு ரொம்ப நள் ஆச்சி.. எனக்கு பிடித்த அழகான பாடல்களில் இதுவும் ஒன்று. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும் ரசிக்க வைக்கும் பாடல்..

Sanjai Gandhi said...

அந்த அன்பென்ற மழையிலே பாட்டு போடுங்ணா... அப்டியே மனச உருக்கும்.. I LOVE THAT SONG..

cheena (சீனா) said...

ஊருக்கொரு வானமில்லையே -
இறைவா உன் படைப்பில்

அருமையான வரிகள் - படைப்பில் பேதமில்லை என்பதை எவ்வளவு எளிதான சொற்களில் தெரிவிக்கிறார் பாருங்கள். பாடல் அருமை

மெளலி (மதுரையம்பதி) said...

அருமையான பாடல், நினைவு படுத்தியமைக்கு நன்றி ராம்

ஐயப்பன் said...

Very nice Song.

Last 25 songs posted in Thenkinnam