Thursday, November 29, 2007

33. தென்பாண்டித் தமிழே



ஆண்: தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

பெண்: வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே
ஆண்: பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே
பெண்: அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே
ஆண்: தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
பெண்: தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே
ஆண்: மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே நீ என்றும் வாழ வேண்டுமே

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

ஆண்: தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா
பெண் : கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தெய்வமே

ஆண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
பெண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
ஆண்: வாழ்த்துவேன் உனை போற்றுவேன் வாழ்வெல்லாம் உனை ஏற்றுவேன்
பெண்: காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே நாம் சேர்ந்து வாழ வேண்டுமே

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

படம்: பாசப் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ், சித்ரா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam