Friday, November 16, 2007

12. தென்றல் வந்து தீண்டும் போது

அவதாரம் படத்தில் இடம் பெற்ற "தென்றல் வந்து தீண்டும்போது" இளையராஜாவின் அருமையான பாடல்களில் ஒன்று. இளையராஜாவும் ஜானகியும் இணைந்து பாடியிருப்பார்கள். மெலிதான இசையும்,ரசிக்க தக்க பாடல் வரிகளையும் அனைவரையும் ஈர்க்கும்.





ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன் பொன்னம்மா சின்ன கண்ணே

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

பெண் : எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது

ஆண் : எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

பெண் : ஓடை நீரோடை இந்த உலகம் அது போல

ஆண் : ஓடும் அது ஓடும் இந்த காலம் அது போல

பெண் : நிலையா இல்லாது நினைவில் வரும் நெறங்களே

ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

ஆண் : ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

பெண் : ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது

ஆண் : குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா

பெண் : கிளியே கிளியினமே அதை கதையாய் பேசுதம்மா

ஆண் : கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

பெண் : தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

ஆண் : திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

பெண் :வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா

ஆண் : எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

பெண் : உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன

ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

பெண் : திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

5 Comments:

Ungalranga said...

//
ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குத//
எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு...
எப்படி இந்த பாட்டை இன்னும் ஞாபகம் வச்சிருந்தீங்க....?!?!
i am the first...ha ha ha....

Unknown said...

இம்சை,

இந்த இசையின் பாடல் தெரிவுகளில் முதல் இடம் வகிக்கும் பாடல் அது. ஒத்திசைவு மிகவும் உயர்நிலையில் இருக்கும் அப்பாடலில். ராசாவும், சானகியும் அந்த ஒத்திசைவின் உச்சம். வண்ணங்களை எண்ணங்களாய் வடித்தெடுகும் சிறு தீண்டல், வாசம், வர்ணனை என அந்த பாடல் நமை இட்டுச்செல்லும் தளம் மிகவும் ரசனைக்குறியது. மனதிற்கினியாளின் மடியில் தலை வைக்கையில், அவள் விரல்போடும் கோலத்தில் கலைவுறும் சிலிர்ப்பை போல மிக நெருக்கமான உணர்வுகளை கிளர்த்தும் வரிகள், ஒலிகள்- ராசா... நீர் ராசா தான்.

SurveySan said...

actually, this is the very best of Ilayarajas rendition so far.
on par with 'Malayalam Guru' songs.
much much better than 'Thiruvasagam'

and I am sure much better than the unheard Symphony as well.

Excellent tune and great singing and uncomparable music.

long live our Raja! ;)

cheena (சீனா) said...

இளைய ராசாவின் இனிமைக் குரல் - மெல்லிய ஒலி - அருமை.

கேள்வி பதில் பாணியில் பாடல் - சிறப்பு

ஐயப்பன் said...

Oru Arputhaman Paadal.. Rasithatil pedithavai.

Last 25 songs posted in Thenkinnam