Monday, March 17, 2008

326. என் கண்ணோடு நெஞ்சோடு



என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி
நீ நீதான் என்று
நான் அன்றே கண்டேன்
அந்த சதோசத்தில்
தூள் தூளாகிறேன் ஓஹோ..
(என் கண்ணோடு..)

ஏன் என் மனம் எம்பி குதித்துதான்
கடலும் மலைகளும் தாண்டுதோ
ஏன் என் நிழல் ஆதிவாசிப்போல்
ஆடை மறந்துதான் திரியுதோ
விண்ணை தாண்டி வெளியே சென்றேன்
உன்னை பாத்ததால் பறக்கிறேன்
எல்லை மீறி இன்பம் கொண்டேன்
உன்னை கண்டதில் சிலிர்க்கிறேன்
தாங்க முடியாத ஆனந்தம்
தூங்க முடியாத பேர் இன்பம் ஓஹோ..
(என் கண்ணோடு..)

படம்: அறிந்தும் அறியாமலும்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, நிதிஸ் கோபாலன்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam