Thursday, March 27, 2008

342. காதல் ஆராரோ



காதல் ஆராரோ காதல் ஆர்ராரோ
கண்ணால் கொன்றாயே கண்ணே நீ யாரோ?
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே
உன்னில் நானே வெளியில் தேடாதே
(மின்னல்..)
(காதல்..)
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே
(தரையில்..)

மனசு மனசு இன்று வலையோசை ஆனதே
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே
(மனசு..)
இணைவதனால் இதழ் இணப்பதனால் இந்த முத்தம் தீராதே
நனைவதனால் மழை நனைப்பதனால் நதி குற்றம் கூராதே
காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள் நாம்
(காதல்..)

எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்
திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்
(எறியும்)
தொடங்கிடவும் அலை அடங்கிடவும் ஒரு ஜென்மம் போதாதே
பிரிவதனால் விதி முடிவதனால் இந்த காதல் சாகாதே
நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே
(காதல்..)

படம்: நரசிம்மா
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: சாய்சிவன், மகாலெட்சுமி ஐயர்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam