Thursday, March 20, 2008

331. நீ பார்த்திடல் அழகு



நீ பார்த்திடல் அழகு
நீ பேசிடல் அழகு
நீ ரசித்திடல் அழகு
அதனால் நான் அழகு
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)

திங்கள் தரையிறங்கி தென்றல் சேர்ந்திணைந்து
ஆடை சூழ்ந்தழகு பெண்ணே
தீயில் சிவப்பெடுத்து கொள்ளன் கோர்த்தெடுத்த
தங்கம் படிந்தழகு பெண்ணே
உன் சிறு மொழி வார்த்தை தீண்டியதால்
என் விழியது மனிதனை தேடியதே
நீ சொன்ன ஒரு வரியில்
இங்கு மலர்ந்திடும் புது மொழியே
தமிழே நீ யார் என்று சொல்லி விடு
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)

விண்ணில் தவங்கள் செய்து மண்ணில் வசந்தம் தந்த
நவம்பர் மாத மழை நீயே
கேட்கும் மொழி அறிந்து தீர்ப்பாய் எனை புரிந்து
ஆசை தீர்த்தழகு நீயே
உன் கருவிழி பார்வை ஒளி கொடுத்தால்
நம் கனவுகள் நாளும் சுடர் விழுமே
நீ மிதக்கும் கனவுகளில் என்றும்
நான் பிறப்பேன் உன் மடியில்
உயிரே நீ யார் என்று சொல்லிடவா
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
அழகு ஆ.. அழகு..

படம்: நவம்பர் 24
இசை: லாரன்ஸ்
பாடியவர்கள்: நரேன், ஷர்மிளா சிவகுரு

விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி

2 Comments:

Udhayakumar said...

/விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி//

en, naan illaiya???

MyFriend said...

//Udhayakumar said...

/விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி//

en, naan illaiya???//

ஆஹா.. நீங்க தேன்கிண்ணம் மூலமா கேட்கலையே. பர்சனலாதானே கேட்டீங்க. அதுவும் பாடலை மட்டும் அனுப்புங்கன்னு சொன்னீங்களே. அதான், உங்க பேரை இங்கே எழுதல. இனி, நீங்க கேட்ட எல்லா பாடலையும் இதிலேயே போட்டு உங்க பேரை சவுண்டா போட்டுடலாம் சவுண்ட் பார்ட்டி அவர்களே. :-)

Last 25 songs posted in Thenkinnam