Thursday, March 27, 2008

343. கண் முன்னே எத்தனை நிலவு



கண் முன்னே எத்தனை நிலவு காலையிலே
கலர் கலராய் எத்தனை பூக்கள் சாலையிலே
ஏன் உடம்பினில் உடம்பினில் மாற்றம்
என் தலை முதல் கால் வரை ஏக்கம்
பருவம் என்றால் எதையோ வேண்டும் காதலிலே

வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம்தானே
வலி என்பது இனிதானே
அது கூட சுகம்தானே
ஒரு முறைதான் உரசி போடி பார்வையிலே

அடி 15 போனது 16 வந்தது
தாவனி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே...

இரக்கம் இல்லையோ?
உன் இதழ் கண்டால்
என் இதழினில் சிறை பிடிப்பேன்
உன் கரம் தந்தால்
என் கரம் கொண்டு
காலம் பிடித்திருப்பேன்
(அடி 15..)

ராத்திரியில் கனவுக்கு காரணம் பெண்தான்
ரகசியமாய் பார்க்க தோன்றும் அவள் முகம்தானே
வேளைக்கொரு பெண்தான் பிறக்க வேண்டும்
வேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும்

அட ஒரு பெண் காதல்
பழ பழசு
இங்க பல பெண் காதல்
புது புதுசு
தங்கம் கொஞ்சம் வேண்டாம்
எனக்கு தங்க புதையல் வேண்டும்
ஓஹோஹோ..
(வயதுக்கு..)

பெண்ணே நீ காதல் செய்ய வேண்டும்
இளமையிலே கல்வியோடு காதலும் வேண்டும்
காற்றில்லா இடத்துக்கும் நான் போவேன்
கண்ணேதிரே பெண் இருந்தால்
நான் கண்மூடி வாழ்வேன்

உன் தகப்பன் திமிரையும் ஏற்றுக்கொள்வேன்
உன் தாயின் திட்டையும் ஏற்றுக்கொள்வேன்
உன் அண்ணன் அடியும் வாங்கிகொள்வேன்
நீ எனது அருகில் நின்றாலே
ஹேஹேஹோ..
(வயதுக்கு..)
(இரக்கம்..)
(அடி 15..)

அடி 15.. 16..
தாவனி.. மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே..

படம்: துள்ளுவதோ இளமை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, திம்மி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam