Thursday, March 6, 2008

315. யார் யாரோ அவன்



சன் சனனன சன் சனனன சன்
யார் யாரோ யாரோ யாரோ யாரோ அவன்
சன் சனனன சன் சனனன சன்
யார் யாரோ யாரோ யாரோ யாரோ அவன்
என்னை வெல்லும் ராஜராஜன் யாரோ அவன்

(சன் சனனன சன்)

என்னைப் போல யாரும் இல்லை
தேடிப் பார்த்தும் காணவில்லை
மாயலோகப் பூவைப் போல் அழகானவன்
அன்பாய் மோதும் காற்றே நீ கண்டால் சொல்லு
யார் யார் யாரோ அவன் யாரோ அவன்

(சன் சனனன சன்)

தாலாட்டு ஓடை நீரில் நான்
தேன் துளிகள் சிந்தும் பூவானேன்
தாலாட்டு ஓடை நீரில் நான்
தேன் துளிகள் சிந்தும் பூவானேன்
மீனாய் வந்தால் நீயும் இந்த நீரின்
இனிமை அறிவாயோ
வானில் போகும் மூன்றாம் பிறை
யாரோ இல்லை நானே நானே
எங்கோப் போகும் அந்த மேகம் கூட
பூவைத் தோளைத் தொட ஆசைப்படும்
யார் யார் யாரோ அவன் யாரோ அவன்

(சன் சனனன சன்)

நான் காதல் கொண்ட தாமரை
என் காதல் விற்பனைக்கில்லை
நான் காதல் கொண்ட தாமரை
என் காதல் விற்பனைக்கில்லை
ஹோ என் காலில் நகமாய்
வாழக் கூட யாரும் இல்லை
பொன் வானத்தில் பூலோகத்தில்
என் வாசம்தான் என் சுவாசம்தான்
கவிதைப் போலே வாழும் என்னைப்
படிக்கும் கவிஞன் யாருமில்லை
யார் யார் யாரோ அவன் யாரோ அவன்

(சன் சனனன சன்)

படம்: சாம்ராட் அசோகா

1 Comment:

இம்சை அரசி said...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சப் பாட்டு...

நல்ல இசை... நல்ல வரிகள்... :)))

Last 25 songs posted in Thenkinnam