Tuesday, March 18, 2008

329.என்னுள்ளே ஏதோ ...

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்...ம்..
(என்னுள்ளே)
என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க -பங்குவைக்க
பொங்கிடும் பூம்புனலில் .... ஆ ஆ ஆ
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலின்
போதையிலே மனம் பொங்கி நிற்க தங்கிநிற்க
காலம் இன்றே தீராதோ?
(என்னுள்ளே)
மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே- மோகங்களே
மல்லிகை மாலைகளே ஆ ஆ ஆ
மல்லிகைமுல்லையின் மாலைகளே
மார்கழிமாதத்துக் காலைகளே சோலைகளே
என்றும் என்னைக் கூடாயோ?
(என்னுள்ளே)

விரும்பிக் கேட்டவர் ஐயப்பன் கிருஷ்ணன்




படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை:இளையராஜா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam