Saturday, March 1, 2008

299. ஈச்சி எழுமிச்சி


Get this widget | Track details | eSnips Social DNA

மாயே மாயே யோ (4)
மாயோ மாயோ மாயோ யோயோ (4)

ஈச்சி எழுமிச்சி ஏரி கருவாச்சு
ஈச்சி எழுமிச்சி ஏரி கருவாச்சு
தண்ணிக்குள்ள பார்த்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வச்சிருக்கும் கண்ணே சாட்சி
(ஈச்சி..)

மயமாயோ மயமாயோ யோயோயோயோ
மயமாயோ மயமாயோ யோ
மயமாயோ மயமாயோ யோயோயோயோ
மயமாயோ மயமாயோ யோ
மாயோ ஓஓ.. மாயோ ஓஓ..

ஆகாயம் பூவாளி அதுப் பாட்டுக்கு ஒழுக
துளிக துளிக விழுதே
சிறு தண்ணித் தோளோடும் மாரோடும் விழுந்து
தொடாத இடமும் தொடுதே
ஒத்த மழைத்துளி பார்த்த இடம்
பித்துக்குழி இவன் பார்க்கலையே
பூத்தும் அரும்பு இன்னும் பூக்கலையே
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
மச்ச கண்ணி உன்ன தாங்கலையே
ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே
பாட்டுச் சத்தம் கேட்கலையே
அந்திப் பகலேதும் பார்க்கலையே
மஞ்சக் கிழங்கே உன்னைப் பார்த்துப்புட்டேன்
மனசுக்குள்ள உன்னைப் போட்டு பூட்டிக்கிட்டேன்
நெஞ்சுக்குள்ள வேர்த்துப்புட்டேன்
கண்ணுக்குள்ள உன்னை மாட்டிக்கிட்டேன்
(ஈச்சி..)
(மாயோ..)

தொழுவோடு சேராத பொளிக்காள கூட
கொடையப் பார்த்து மிரளும்
கொடகண்டு மெரளாத கோடாளிக் காள
தாவணிப் பார்த்து மிரளும்
ம்ம்ம்...
பாசிமணி ரெண்டு கோர்க்கையில
பாவி மனசையும் கோர்த்தவளே
நீந்திக் கிடந்த தண்ணிக்குள்ள
நெஞ்சில் தீயை வச்சிப் போனவளே
ஆஆஆ....
தத்தி நடக்குற வாத்துக் கூட்டம்
தண்ணிக்குள்ள முட்டை போடுமடி
வாத்து முட்டையப் போல
உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி
ஆஆஆ..
கையில் கைய வச்சு அழுத்திக்கடி
கண்ணில் கண்ண வச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வச்சு படுத்துக்கடி
நேரம் வந்தா என்னை உடுத்திக்கடி
(ஈச்சி..)
மாயே மாயே யோ (4)

படம்: தாஜ்மஹால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: கிருஷ்ணராஜ், மனோ, அருந்ததி, ரஃகிப்
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam