Thursday, January 3, 2008

167. அழகு குட்டி செல்லம்





அழகு குட்டிச்செல்லம் உனை அள்ளித்தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்கு பேசத்தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதர்க்கிந்த ஆராய்ச்சி
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]


ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்துவிட்டான்
இப்படியோர் ரெட்டினக்கால் தோரனை... தோரனை
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]


நீ தின்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை தவழ்ந்த படி நீ ஓட்டி போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒழிந்து ஒழிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே புன்னகை மன்னனே
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]


படம் : சத்தம் போடாதே
இசை : யுவன்சங்கர் ராஜா
பாடியவர் : சங்கர் மஹாதேவன்
பாடலாசிரியர் : ந.முத்துக்குமார்

விரும்பி கேட்டவர்: உதயா

3 Comments:

Anonymous said...

மிக்க நன்றி ...

Anonymous said...

Dear JK,
Thanks for the nice song and the Great Lyric.

Kutti pappa vai varnithu, thamizhil indhai pola oru kavidhai varigal - idhu varai vandhadhu illai....

Miga miga azhagna , unmaiyana Varnanaigal.... Indha varigal enaku migavum pidithadhu.

Special Thanks for the Lyrics....

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை ஏனிந்த முட்டிக்கால் தொழுகை

எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை

Enna oru azhagana Explanation....... V.V.V.V.Nice...

With Love,
Usha Sankar.

ஜே கே | J K said...

நான் கூட முன்ன கேட்ட போது அந்த் அளவுக்கு ஈடுபாடு இல்ல.

ஆனா, இப்போ போஸ்ட் போட எல்லா வரிகளையும் கவனிச்சப்போ தான் ரொம்ப பிடிச்சு போயிடுச்சு.

அதுவும் வீடியோ பார்த்தா, எல்லா குழந்தைகளும் கொள்ளை அழகு.

பாடல் விரும்பிக்கேட்ட உதயாவுக்கு நன்றி.

Last 25 songs posted in Thenkinnam