Friday, January 18, 2008

197. உன்னை கண்டேனே முதல் முறை


TamilBeat.Com - Un...

உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
(உன்னை கண்டேனே..)
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹய்யயோ.. அச்சம் வருதே
தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹய்யயோ.. சீ என்னவோ பண்ணினாய் நீயே
(உன்னை கண்டேனே..)

எறிக்கிற மழை இது
குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது
அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது
இனமுள்ள பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே..

நிஜமுள்ள பொய் இது
நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது
மரணத்தில் வாழ்விது
அந்தரத்தின் கடல் இது
கட்டி வந்த கனவு இது
அஹிம்சைகள் சொல்வது கேள் பெண்ணே

ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும்
உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே
உள்ளே தித்திக்குமே

காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம்
பெண்ணே நானும் உன் கண்ணைப் படிப்பேன்
புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ
மெய் சொல்லுதோ

ஓ.. காதல் எனை தாக்கிடுதே
சரிதான் எனையும் அது சாய்த்திடுதே
இரவில் கனவும் என்னை சாப்பிடுதே
பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாரும் இல்லையே
(உன்னை கண்டேனே..)

ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்
உடனே என் உள்ளே நீ வருவாய்
கோயில் உள்ளே கண் மூடி நின்றால்
உன் உருவம் தானே எந்நாளுமே நெஞ்சில் தோன்றுமே

நான் உன்னால் தான் ஸ்வாசிக்கிறேன்
நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்
உயிரை விடவும் உனை நேசிக்கிறேன் ஹேஹே
கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்

(உன்னை கண்டேனே..)
(எறிகிற மழை..)
(நிஜமுள்ள..)
(ஏங்கினேன்..)
மனசுக்குள் ஏனோ சொல் சொல்
எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் ஏதோ ஜில் ஜில்
இது சரி தானா நீ சொல் சொல்

படம்: பாரிஜாதம்
இசை: தரன்
பாடியவர்கள்: ஹரிசரண், ஸ்ருதி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam