Thursday, January 24, 2008

211. உண்மையில் ஆசைகள் வேறோன்றும் இல்லை...



எல்லா நாளும் அதுபோல் இல்லை
அன்பே இங்கே என் மனம் இல்லை
உன்முகம் காண நாட்களை எண்ணி வாடுறேன்
அந்நாள் வருகையில் தொலையுமே தொல்லை
உண்மையில் ஆசைகள் வேறோன்றும் இல்லை
உன்னையே எண்ணி எண்ணி எண்ணி வாடுறேன்

பாத்து நின்றேன் வழி பாத்து நின்றேன் - உந்தன்
வாசல் வரும் வழி பாத்து நின்றேன்
காத்திருப்பேன் எதிர்பாத்திருப்பேன் - அந்த
நாளது வரையினில் பாத்திருப்பேன்

தொலைவாய் தூரமாய் இருந்தாலும் - உன்
நினைவை என்னை விட்டுத் தொலைப்பேனா
நினைவை தொலைக்க நான் நினைத்தாலும்
உந்தன் நினைவு என்னை விட்டுத் தொலைந்திடுமா
தந்த முத்தம் என்றும் என்னுள் இனிக்கும்
உன்தன் வாசம் என்னை வந்து துளைக்கும்
உந்தன் வார்த்தைகள் அடிக்கடி ஒலிக்கிறதே
எந்தன் தூக்கத்தை உன்நினைவு தொலைக்கிறதே
உன்னைக் காண வரச்சொல்லி நான் வருவேன் - வந்து
மறைந்து காக்க வைத்து ரசிப்பேன்
பின்னர் அதனை உனக்கே சொல்லித் தொலைப்பேன் - நீ
அடிக்க வலி மறந்து சிரிப்பேன்

அடித்திடும் கைகள் அணைத்திடும் - அங்கே
உள்ளம் ரெண்டும் ஒன்றாய் மாறும்
அந்த இன்பம் இங்கே இல்லையே
எல்லா நாளும் அதுபோல் இல்லை
அன்பே இங்கே என் மனம் இல்லை

பாத்து நின்றேன் வழி பாத்து நின்றேன் - உந்தன்
வாசல் வரும் வழி பாத்து நின்றேன்
காத்திருப்பேன் எதிர்பாத்திருப்பேன் - அந்த
நாளது வரையினில் பாத்திருப்பேன்

எனக்குள் இதயமது துடித்தாலும் - அது
உனக்காய் துடிப்பதை நீ அறிவாயே
துாக்கம் வந்து நான் படுத்தாலும் - உன்னை
கனவில் பார்க்க மனம் மறக்காதே
எந்தன் தலையணையுடன் இங்கு கதைப்பேன்
அன்பே நீயென்று செல்ல முத்தம் கொடுப்பேன்
பக்கம்வா வென்று மெல்லக் கட்டியணைப்பேனே
பின்னர் அதையெண்ணி நான் மெல்ல சிரிப்பேனே
அன்று வளையல் வாங்கித் தர அழைத்தேன் - நீயே
பணம்கொடு என்று சொல்லி மறைந்தேன் - உன்னை
ஒளிந்து பார்த்து நின்று சிரித்தேன் - பின்னர்
ஒடிவந்து உன்னைக் கட்டி அணைத்தேன்

அடித்திடும் கைகள் அணைத்திடும் - அங்கே
உள்ளம் ரெண்டும் ஒன்றாய் மாறும்
அந்த இன்பம் இங்கே இல்லையே
எல்லா நாளும் அதுபோல் இல்லை
அன்பே இங்கே என் மனம் இல்லை

இசை : திஷாந்தன்
பாடியவர் : Sujeeth G
இசை அல்பம் : அடி மேல் அடி
பாடல் வரி : Sujeeth G

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam