Sunday, January 13, 2008

191. யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்


Yaarum Illatha.mp3

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்
(யாரும்..)
(யாரும்..)

ஆகாயம் வெண்மேகம் பாயாக வேண்டும்
பாய் மீது விண்மீன்கள் பூவாக வேண்டும்
ஆதாமும் ஏவாளும் நாமாக உருமாறி
அகிலத்தை புதுப்பிக்க வேண்டும் வேண்டும்

என் விழியில் பிம்பம் என்றும் நீயாக வேண்டும்
உன் மொழிகள் ஒன்றே என்றும் என் காதில் வேண்டும்
உன்னுடைய பெயர் சொல்லி என் இதயம் துடிக்கின்ற
வரம் ஒன்று பெற வேண்டுமே
என் நாடி நரம்பெங்கும் உன் ஜீவன் குடி வந்து
ஸ்வரம் மீட்டும் சுகம் வேண்டுமே
நொடி கூட நில்லாத கடிகார முள்ளாக
மனம் உன்னை வலம் வந்து
உயிரோடு உயிர் சேர..
(யாரும்..)

காவிரியில் வந்து கங்கை கை சேர்க்க வேண்டும்
நாமும் அதில் சென்று காதல் நீராட வேண்டும்
ஈழத்தில் போர் ஓய்ந்து தேன் முல்லை பூ பூத்து
நீ சூட தர வேண்டுமே
தீ எறியும் காஷ்மீரில் தென்றல் வரும் திருநாளில்
ஊர்கோலம் வரவேண்டுமே
வெடிகுண்டு பூச்செண்டு என மாறும் நாள் ஒன்று
மடி மீது தலை சாய்த்து சுகமாக துயில் மேகம்..
(யாரும்..)

படம்: ஞானப்பழம்
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்

விரும்பி கேட்டவர்: .:: மை ஃபிரண்ட் ::.

4 Comments:

MyFriend said...

நானே கேட்டு நானே பதிந்து நானே கேட்கிறேன் என்றால் இந்த பாட்டு என்னை அவ்வளவு கவர்ந்துள்ளது. பல வருட காலங்களாக நான் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடலை பலர் கேட்டிருக்க கூட சான்ஸே இல்லை.. ஆனால், ஒரு தடவை கேட்டால் கண்டிப்பாக பிடிக்கும். அந்த அளவு ரசணையான பாட்டு

இந்த பாட்டு பாக்யராஜ் & சுகன்யா புதுசா கல்யாணமானபோது வரும். பெண் குரலில் வர்ற வரியை கவனிச்சீங்கன்னா, அவளுடைய காதல், தன் காதல் கணவரின் மேல் உள்ள அன்புன்னு அவங்க ஒரு பக்கம் கனவு காண்பாங்க. அதே நேரம் தன்னோட கணவர் எப்போதும் தன்னை விட சமூதாயத்தின் மேல் அக்கறையா இருப்பார். யாரும் இல்லாத ஒரு தீவில் இவருடன் தனியாக இருக்கணும்ன்னு விரும்புவாங்க..

ஆனா, ஆண் குரலுடைய வரிகள் படிச்சீங்கன்னா, அவருக்கும் அவர் காதலி மேலே அன்பு இருக்கும். ஆனால், எப்போதும் சமூதாயத்தின் மேல் அக்கறை இவருக்கு ஜாஸ்தி. அவர் காதலை வர்ணிக்கும்போதும், யுத்தம் வேண்டாம், அமைதி வேண்டும், நிம்மதி வேண்டும்ன்னு அவர் அறியாமலே பாடுவார் பாருங்க..

அப்புறம், பாடல் இசை.. ரொம்ப ரம்மியமா.. இதமா எந்நேரம் கேட்டாலும் இனிமையா இருக்கும். அதை விட சூப்பர்.. சூப்பர் சிங்கர்ஸ் உன்னி & சுஜாதா காம்பினேஷன்ல கலக்கியிருப்பாங்க.. என்னோடு சேர்ந்து நீங்களும் ரசிக்கிறீர்களா? :-)

CVR said...

மிகவும் இனிமையான,அழகான வரிகள் கொண்ட பாட்டு!!
எனக்கும் இது மிகவும் பிடித்தமான பாட்டு!!
பதிவிட்டதற்கு நன்றி!! :-)

கானா பிரபா said...

அட அட அட

காதல் சுவை சொட்டச் சொட்ட அழகிய கவிதையால் நெய்திருக்காங்கப்பா,

சிஸ்டரு
பாட்டுப் போட்டதுக்கு தாங்க்ஸு

குசும்பன் said...

சூப்பரு

Last 25 songs posted in Thenkinnam