Thursday, January 24, 2008

212. எந்தன் வானமும் நீதான்


Enthan Vaanamum I....

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே
எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உந்தன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி ஓ...
(எந்தன் வானமும்..)

நீ நடக்கும்போது உன் நிழலும்
மண்ணில் விழும் முன்னே ஏந்திக்கொள்வேன்
உன் காதலின் ஆழம் கண்டு கலங்குதே
உன்னுடைய கால்த்தடத்தை மழை அழித்தால்
குடையொன்றை பிடித்து காவல் செய்வேன்
ஹ்ம்.. உன்னால் இன்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே
ஓ.. (உன் பேச்சிலே..)

ஒரே ஒரு வார்த்தையில் கவிதை என்றால்
உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும்
ஹ்ம்.. என் பேரைத்தான் யாரும் கேட்டால் உன் பேர் சொல்கிறேன்
ஒரே ஒரு உடலில் இருதயம்
காதலெணும் உலகத்தில்தான் இருக்கும்
நீயில்லையேல் நானில்லையே நெஞ்சம் சொல்லுதே
(உன் பேச்சிலே...)
(எந்தன் வானமும்..)

படம்: வாழ்த்துக்கள்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிசரண், மஹதி
பாடலாசிரியர்: நா. முத்துகுமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam