Wednesday, January 9, 2008

179. பாத கொலுசு பாட்டு

மயக்கும் வசிகர குரலுக்கு சொந்தகாரர் எஸ்.பி.பி மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் அமைந்த ஒரு அருமையான பாடல். வாலிப கவிஞரின் மிகைப்படுத்தாத அழகான உவமைகளோடு அருமையான வரிகளோடு அமைந்த பாடல் இது.





பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்
பாவை சொகுசு பார்க்க கோடி பெறும்.. கோடி பெறும்..

சித்தாடை போட்ட சின்னமணித்தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப்பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலைதான்..

(பாத கொலுசு)

குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்தி வரும்
கொய்யாத மாங்கனியை கொடியிடை தான் ஏந்தி வரும்
மத்தாப்பு வாணமெல்லாம் வாய் சிரிப்பு காட்டி வரும்
மானோடு மீன் இரண்டை மைவிழியோ கூட்டி வரும்
பொன்னாக ஜொலிக்கும் பெண்பாவை அழகு
ஒன்னாக கலந்த முன்னூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில் தான்

(பாத கொலுசு)

செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வச்ச சித்திரமே
தென்பாண்டி கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கை மணக்கும் தென்பழனி சந்தனமே
தென்காசி தூறலிலே கண்விழித்த செண்பகமே
பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ
ஈரேழு உலகில் ஈடாக யாரோ
நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ

(பாத கொலுசு)

பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
கல்யாண பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டு உடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்கு தோதான ஜோடி
வந்தாச்சு காலநேரம் மாலையிடத்தான்

(பாத கொலுசு)

சித்தாடை போட்ட சின்னமணித்தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப்பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலைதான்..

பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்
பாவை சொகுசு பார்க்க கோடி பெறும்.. கோடி பெறும்

படம்:- திருமதி.பழனிச்சாமி
இசை:- இளையராஜா
பாடியவர்:- SP.பாலசுப்பிரமணியம்
பாடல்:- வாலி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam