Saturday, January 19, 2008

204. சற்றுமுன் கிடைத்த தகவல் படி...


SSitharamal-Satrum...

சற்றுமுன் கிடைத்த தகவல் படி
தொலைந்து போனது என் இதயமடி
உயிரே என் உயிரே உயிரே..
(சற்றுமுன்..)
உற்று பார்க்கும் தினம் புரிந்ததடி
இளமை சிறகடித்து பறந்ததடி
உயிரே என் உயிரே உயிரே..
நிலை மாறாமல் தலை சாயாமல்
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்
(சற்றுமுன்..)

மாளிகையாய் மலர் மாளிகையாய்
உன் மனதினை அலங்கரிப்பேன்
தேவி உந்தன் கண்களில்
நான் தினசரி அவதரிப்பேன்
தீவிரமாய் தினம் தீவிரமாய்
உன் தேடலை அனுமதிப்பேன்
தீண்டும் போது நேர்ந்திடும்
உன் தவறுகள் அனுசரிப்பேன்
முதல் நாள் எனை தீட்டினாய்
மறுநாள் உயிர் பூட்டினாய்
சங்கத்தமிழ் போல உன் மனம்
சங்கமிக்கும் போது சந்தனம்
இதழ் ஊறாமல் இமை சேராது
உன் நினைவால் நிலைத்திருப்பேன்
(சற்றுமுன்..)

யாத்திரைகள் என் யாத்திரைகள்
உன் விழிகளில் நிகழ்கிறதே
பாஷை கேட்கும் கேள்விகள்
அட நண்பகல் குளிர்கிறதே
ராத்திரிகள் என் ராத்திரிகள்
மிக ரகசியமாகிறதே
நாளும் பூக்கும் ஞாபகம்
அட வன்முறை பேசியதே
எதனால் இமை பார்த்தது
எதனால் இதழ் கோர்த்தது
வங்கக்கடல் ஈரம் போகுமா
இந்த புதிர் காதல் ஆகுமா
இமை மூடாமல் இறை தேடாமல்
உன் உறவால் உறந்திருப்பேன்
(சற்றுமுன்..)

படம்: சிந்தாமல் சிதறாமல்
இசை: பரணி
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam