Tuesday, January 15, 2008

192. தைப்பொங்கலும் வந்தது




Get Your Own Music Player at Music Plugin
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்

தைப்பொங்கலும் வந்தது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியில் போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள்
தென் நாட்டவருக்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்ற ஆடை கட்டிடும்
தெய்வ மங்கையடி
(தைப்பொங்கலும்..)

முப்பாட்டன் காலம் தொட்டு
முப்பாகம் யாரால?
கல்மேடு தாண்டி வரும்
காவேரி நீரால
சேத்தோடு சேர்ந்த விதை
நாத்து விடாதா
நாத்தோட சேதி சொல்ல
காத்து வராதா?
செவ்வாழ செங்கரும்பு
சாதிமல்லி தோட்டம்தான்
எல்லாமே இங்கிருக்கு
ஏதுமில்ல வாட்டம்தான்
நம்ம சொர்க்கம் என்பது
மண்ணில் உள்ளது
வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது
கண்ணில் உள்ளது
கனவில் இல்லையடி
(தைப்பொங்கலும்...)

படம்: மஹாநதி
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

4 Comments:

கப்பி | Kappi said...

பத்து நிமிஷ கேப்ல முந்திட்டீங்க..ஜஸ்ட்டு மிஸ்ஸு :)))

பொங்கலோ பொங்கல்!!

cheena (சீனா) said...

இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்

Boston Bala said...

பாட்டுன்னா இது பாட்டு.

நன்றிகள் பல

Unknown said...

காலம் கடந்தும் நினைவில் நிற்கும் கவிஞர் வாலியின் வரிகள்.

Last 25 songs posted in Thenkinnam