Saturday, January 5, 2008

170. கண்மணி நில்லு காரணம் சொல்லு



கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா?

கடந்ததை நினைத்து ஏங்கும் நேரம்
காதலை மறுத்தால் நியாயமா?
கண்களில் வளர்ந்த காதலை நீயும்
கலைத்திட நினைத்தால் மாறும்
[கண்மணி ...]

மலர் ஒன்று எடுத்து சரம் ஒன்று தொடுத்து
தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன்
மலர்ச்சரம் பிரித்து மலர்வளை தொடுத்து
ஏழையென் காதலை நீ புதைத்தாய்
புதைத்தது மீண்டும் மலராகும்
உன் பூஜையை நினைத்தே சரமாகும்
[கண்மணி ...]

இதயத்தில் தோன்றும் காதல் நிலவே
உதயத்தை நீயேன் மறந்து விட்டாய்
உதயத்தை மறுத்து இதயத்தை வெறுத்து
உயிரின்றி எனையேன் வாழவிட்டாய்
காதலின் விதியே இதுவானால்
கல்லறைதான் முடிவாகும்
[கண்மணி ...]

கண்மணி நெஞ்சம் கலங்கிய நேரம்
காதல் நினைவும் மாறுமா?
கோபத்தில் ஊடல் செய்த நெஞ்சம்
கல்லறை முடிவை தாங்குமா?
காதலை வென்ற காதலன் உயிரை
பிரிந்தால் இனியும் வாழுமா?....

படம் : ஊமை விழிகள்
இசை : மனோஜ் க்யான்
பாடியவர் : SN. சுரேந்தர், சசிரேகா
வரிகள் : ஆபாவாணன்

1 Comment:

Anonymous said...

//கண்மணி நில்லு காரணம் சொல்லு"//

நம்ம ரீச்சரையே கேள்விக்கேக்கற அளவுக்கு வளந்துட்டியா நீ ?

Last 25 songs posted in Thenkinnam