Monday, September 1, 2008

668 ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்



ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
என் ஜன்னலோரத்தில் நிலா நிலா
கண்கள் கசக்கி நான் துள்ளியெழுந்தேன்
என் காதில் சொன்னது ஹலோ ஹலோ!
நிலா நிலா கை வருமா
இல்லை இல்லை கை சுடுமா?


இதயம் திருடுதல் முறையா - அந்த
களவுக்கு தண்டனைகள் இல்லையா இல்லையா?

முத்தத்தில் கசையடி நூறு - அந்த
முகத்தில் விழவேண்டும் இல்லையா இல்லையா?

நீ கொண்ட காதலை நிஜமென்று நான் வாழ
தற்கொலை செய்யச் சொன்னால் செய்வாயா?
தப்பித்து நாடு தாண்டிச் செல்வாயா?

இதய மலையேறி நெஞ்சென்ற பள்ளத்தில்
குதித்து நான் சாக மாட்டேனா?
குமரி நீ சொல்லி மறுப்பேனா?

- ஏப்ரல் மாதத்தில்...

மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால் - ஹையோ
எப்படி என்னைக் கண்டு பிடிப்பாய்? பிடிப்பாய்?

மேகத்தின் மின்னல் டார்ச் அடித்து அந்த
வானத்தில் உன்னைக் கண்டு பிடிப்பேன் பிடிப்பேன்

ஹே கிள்ளாதே
என்னைக் கொல்லாதே..
உன் பார்வையில் பூத்தது நானா?

சுடுவேளை கேட்டாலும் மழை வார்த்தை சொல்கின்றாய்
என் நெஞ்சம் அடையாது புரியாதா?
கண்ணாடி மறையாது தெரியாதே?
கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு
உன் காதல் அது சொல்லும் தெரியாதா?
தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா?


ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
உன் ஜன்னலோரத்தில் நிலா நிலா
கண்கள் கசக்கி நான் துள்ளியெழுந்தேன்
அது காதில் சொன்னது ஹலோ ஹலோ!
நிலா நிலா கை வருமே
தினம் தினம் சுகம் தருமே!


திரைப்படம் : வாலி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam