Sunday, September 7, 2008

686. சிறு பொன்மணி அசையும்





சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்

(சிறு பொன்மணி)

விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்

தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது
அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது
கிளி பாடுது உன் நினைவினில்

(சிறு பொன்மணி)

நதியும் முழு மதியும்
இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம்
விளையானது மஞ்சம்
கதை பேசுது கவி பாடுது
கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம்
பயிரானது உன் நினைவுகள்

(சிறு பொன்மணி)


படம்: கல்லுக்குள் ஈரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி

8 Comments:

தமிழன்-கறுப்பி... said...

இந்தப்பாட்டு எந்தப்படத்துல எந்தப்படத்துல அப்படின்னு சுப்ரமணியபுரம் படம் பாத்ததுலயிருந்து தேடிக்கிட்டே இருந்தேன்...:)

தமிழன்-கறுப்பி... said...

ரொம்ப நன்றி அண்ணே...

தமிழன்-கறுப்பி... said...

அது எப்படிண்ணே உங்களுக்கு இந்தப்பாட்டு போடணும்னு தோணிச்சு...!!!!!!!

தமிழன்-கறுப்பி... said...

ரொம்ப நன்றி தல...

தமிழன்-கறுப்பி... said...

உண்மைல தேடிக்கிட்டிருந்தேன் வரிகள் எல்லாம் வேணும்னு ஆனா படம் எதுன்னு தெரியாமப்போச்சு...


நன்றி...

ஆயில்யன் said...

ரொம்ப நாட்களுக்கு பிறகு கேட்ட பாடல் :) (எப் எம் வானொலியில் 2 வருஷத்துக்கு முன்னாடி கேட்ட ஞாபகம் !)

நன்னி!

ஆயில்யன் said...

//தமிழன்... said...
அது எப்படிண்ணே உங்களுக்கு இந்தப்பாட்டு போடணும்னு தோணிச்சு...!!!!!!//


அண்ணே! அவுருக்கு தெரியும்ண்ணே!ஏன்னா அவுரும் உங்களை மாதிரியே ஃபீல் பண்ணியிருப்பாருண்ணே ! :))))

கப்பி | Kappi said...

தமிழன்

அண்ணாச்சி...ஏன் இம்புட்டு ஃபீலிங்க்ஸ் :))

நன்றி :))

ஆயில்யன்

//ன்னா அவுரும் உங்களை மாதிரியே ஃபீல் பண்ணியிருப்பாருண்ணே //

இது எனக்கே தெரியாதேண்னே :))

Last 25 songs posted in Thenkinnam