Tuesday, September 16, 2008

701. பாட்டுத் தலைவன் பாடினால்




பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுதான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுதான்

சோர்ந்தபோது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே

(பாட்டுத் தலைவன் பாடினால் )

காதல் பேசும் தாழம்பூவே
ஓவியம் ஆனதே கைகள் மீது
கைகள் வண்ணம் தீட்டும் நேரம்
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்
பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே
காதலே வாழ்கவே ஆயிரம் காலமே
நீதானே தாலாட்டும் நிலவே

(பாட்டுத் தலைவன் பாடினால் )

பாதி ஜாமம் சாயும் போதும்
பால்நிலா வானிலே காதல் பேசும்
ஊரைத் தூக்கம் ஆளும்போது
பார்வைகள் பேசுதே பாவையோடு
காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்
ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்
நாந்தானே தாலாட்டும் நிலவு

(பாட்டுத் தலைவன் பாடினால்)


படம்: இதயக்கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam