Sunday, September 7, 2008

688. மாளவிகா மாளவிகா





மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா
தென்றல் வந்து என்னைக் கேட்டு செல்லும் செல்லும்
தேடி வந்து உன்னைத் தொட்டு சொல்லும் சொல்லும்
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
(மாளவிகா..)

உன்னை நான் முதல் முதலாய் பார்த்தேனே இப்போதே
புதிதாக நான் பிறந்தேன்
அது சரி அது சரி அது சரி அது சரி
கண்ணாலே என்னோடு நீ பேச அப்போதே
என் பெயரை நான் மறந்தேன்
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்
நழுவுகிற தாவணிதான் விடுமுறை கேட்கும் மாயமென்ன?
தடுத்திடவே நினைத்தாலும் மனசுக்குள் சிலிர்க்கும் மாயமென்ன?
குடையிருந்தும் நனைகின்றோம் காதல் மழை பொழிகிறதே
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
(மாளவிகா..)

நீ சிந்தும் புன்னகையே பார்த்தாலே நெஞ்செல்லாம்
சிலயாக போவது ஏன்?
அது சரி அது சரி அது சரி அது சரி
உன் கண்கள் என் கண்ணை சந்திக்கும் நேரம் நான்
சிலயாக ஆவதென்ன?
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்
தூரல்தான் தேனாகும் விரலால் நீயும் தொட்டாலே
முள்ளெல்லாம் பூவாகும் உந்தன் பார்வை பட்டாலே
கரைகின்றேன் தேய்கின்றேன் உன் நினைவில் உறைகின்றேன்
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
(மாளவிகா..)

படம்: உன்னைத் தேடி
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா

1 Comment:

கிரி said...

மாளவிகா மாளவிகா ன்னதும் நான் கூட தலைவியை பற்றிய செய்தியோ என்னவோன்னு ஆசையாக வந்தேன் :-))) சரி இருந்தாலும் பாட்டை கேட்டு மனதை தேத்திக்கிறேன்

Last 25 songs posted in Thenkinnam