Sunday, May 4, 2008

409. ஆகாயம் ஆகாயம் மேகம் பாரமா?



ஆகாயம் ஆகாயம் மேகம் பாரமா?
உன் வாழ்வில் உன் வாழ்வில் நானே சோகமா?
உயிரே எனை விலகாதே
என் நிழலே என்னை பிரியாதே
உயிரே எனை விலகாதே
என் நிழலே என்னை பிரியாதே
என் பாடல் என் காதல்
உன்னை என்றும் தேடி வருமே
(ஆகாயம்..)

வானவில் வண்ணம் மழையில் சாயம் போகுமோ?
தாயின் முத்தம் குழந்தைக்கு காயம் ஆகுமோ?
பூங்காற்றே பூவை கொல்லாதே
என் அன்பே நெஞ்சை கிள்ளாதே
என் பாடல் என் காதல்
உன்னை என்றும் தேடி வருமே
(ஆகாயம்..)

நிலவும் ஒலியும் இன்று பிரிந்து போகுமோ?
அலையும் கரையும் நிலையாய் விலகி போகுமோ?
தென்றலே தள்ளி செல்லாதே
இதய கதவினை மூடி கொள்ளாதே
என் பாடல் என் காதல்
உன்னை என்றும் தேடி வருமே
(ஆகாயம்..)

படம்: சித்திரம் பேசுதடி
இசை: சுந்தர் சி. பாபு
பாடியவர்: ஹரிஹரன்

விரும்பி கேட்டவர்: தங்கமணி சிபி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam