Tuesday, May 13, 2008

428. இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே



ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ..

இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே
வசந்த கோலங்களை வானின் தேவதைகள்
கண்டு ரசிக்க வந்து கூடிவிட்டார்
இங்கு நமக்கு ஹோ..
(இசையில்..)
ஆ..

தேய்ந்து வளரும் தேன் நிலாவே
மடியில் வா
தேய்ந்திடாத தீ குழம்பாக ஒளிர வா
வானத்தில்..
வானத்தில் மின்னிடும் வைரத்தின்
தாரகை தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா
ஆ...
(இசையில்..)
ஆ..

நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்
உயிர்களே...
உயிர்களே உயிர்களே உலகிலே
இன்பத்தை தேடி தேடி
கிரஹத்துக்கு வந்ததே
ஆ..
(இசையில்..)

படம்: ஹே ராம்
இசை: இளையராஜா
பாடியவர்: அஜய் சக்ரவர்த்தி
வரிகள்: இளையராஜா

விரும்பி கேட்டவர்: செந்தில்

3 Comments:

கப்பி | Kappi said...

நன்றி! :)

Senthil Kumar Vasudevan said...

மிக்க நன்றி!!

Anonymous said...

அருமையான பாட்டு, So rich in music

Last 25 songs posted in Thenkinnam