Tuesday, May 13, 2008

429. ஓ பட்டர்ஃப்ளை



ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
ஏன் விரித்தாய் சிறகை
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை

ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
ஏன் விரித்தாய் சிறகை
எனையும்தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
ஆகா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆகா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே

உனை நான் சந்தித்தேன்
உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை

(ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை)

மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
ஆகா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை

(ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை)


படம்: மீரா
பாடல்: வாலி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஆஷா போஸ்லே

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam