Saturday, June 14, 2008

493. இருபது கோடி நிலவுகள் கூடி


Iruvathu Kodi Nilavu - Thullatha Manamum Thullum

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ

நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..
(இருபது..)

தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ
மானிடப் பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு
(நூறு கோடி..)
(இருபது..)

ஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே
தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே
மேனி கொண்ட கன்னம் மின்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை
(நூறு கோடி..)
(இருபது..)

படம் :துள்ளாத மனமும் துள்ளும்
இசை :SA ராஜ்குமார்
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

2 Comments:

சின்னப் பையன் said...

அருமையான பாட்டு... நன்றி...

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கொடுத்த சுட்டியில் அப்பாடலை எடுத்து விட்டதாகக் கூறுகிறார்கள். ஆகவே இங்கு செல்லவும், http://www.youtube.com/watch?v=YzHfJGhjkfs&feature=PlayList&p=AF24604D59088E2E&playnext=1&playnext_from=PL&index=1

அன்புடன்,
டோண்டு ராகவன்

Last 25 songs posted in Thenkinnam