Wednesday, June 25, 2008

532. மல்லிகை என் மன்னன்




மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ.....

எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ.....

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!
கொஞ்சிப்பேசியே அன்பைப் பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நானள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ

[மல்லிகை...]

பொன் மாங்கல்யம் வண்ணப் பூச்சரம்
பொன் மாங்கல்யம் வண்ணப் பூச்சரம்
மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது!
ஓராயிரம் இன்பக்காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது!
நம் இல்லம் சொர்க்கம்தான்
நம் உள்ளம் வெள்ளம்தான் ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான்
நான் தேடிக்கொண்டது

[மல்லிகை...]

படம்: தீர்க்க சுமங்கலி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: வாணி ஜெயராம்
பாடல்: கவிஞர் வாலி

விரும்பி கேட்டவர்: மாஜா

3 Comments:

Anonymous said...

Mrs.Vaniyin one of the hits..

vaniyin inimaiyana kuralil

ippa kettalum, manam palasai kilarum

Anonymous said...

Azhagae Prammanidam manukodukka poyirunthaen...

podalama..

சந்திர வம்சம் said...

அருமை நண்பர்

Last 25 songs posted in Thenkinnam