Sunday, June 22, 2008

526. சோதனை தீரவில்லை


Sodhanai Theeravillai - Jayachandran



கனவாக வந்த உறவு
கலைந்து போனதம்மா
கண்ணீரில் நனைந்த நெஞ்சு
கலங்கி வாடுதம்மா

சோதனை தீரவில்லை
சொல்லி அழ யாருமில்ல
முன்னப்பின்ன அழுததில்ல
சொல்லித்தர ஆளுமில்ல
சொல்லுங்க சொல்லுங்க
அழுத்திச் சொல்லுங்க
சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்ல
வாழ்ந்து முடிச்சவன்
கூட்டிக் கழிச்சான்
கொண்டு போக இங்கு மிச்சமில்ல

(சோதனை தீரவில்ல)

சொந்தம் இங்கே யாரோ யாரோ
வந்த பந்தம் எல்லாம் கானல் நீரோ
முத்தெடுக்கப் போனேன் நானே
மூச்சடைச்சுப் போனேன் மானே
பாசம் ஒரு வேஷம் தானே
நம்புவது மோசம்தானே
சொல்லுங்க சொல்லுங்க
அழுத்திச் சொல்லுங்க
சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்ல
பந்தத்தையும் ஒரு சொந்தத்தையும்
நம்பிக் கிடப்பதில் இங்கே அர்த்தமில்ல

யாரோ சொந்தம் யாரோ
யாரோ யாரறிவாரோ

ரோசாப்பூவூ எங்கே எங்கே
அது ராசா மார்பில் ஆடும் அங்கே
புத்திக் கெட்டுப் போனேன் தாயே
பொட்டு வச்சு வாழ்க நீயே
பூப்பறிச்ச பாவி நானே
பூ முடிச்சு வாழ்க மானே
நந்தவனம் ஒன்னு வெந்துவிடுமின்னு
தண்ணி கொண்டுவந்து காத்திருந்தேன்
அந்த வனத்திலே ஜீவநதி ஒன்னு
வந்து கலப்பதைப் பார்த்திருந்தேன்

(சோதனை தீரவில்லை)


படம்: செந்தூரப் பூவே
இசை: மனோஜ் க்யான்
பாடியவர்: ஜெயச்சந்திரன்


**

விரும்பிக் கேட்டவர்: லோஷன்

2 Comments:

வல்லிசிம்ஹன் said...

என்ன ஒரு சோகம்.

Anonymous said...

Nice song and nice lyrics Captain sad good acting

Last 25 songs posted in Thenkinnam