Wednesday, June 4, 2008

481. காட்டு குயிலு மனசுக்குள்ள - தளபதி



காட்டு குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலைவிட்டு கச்சைகட்டு ஆடத்தான்
(காட்டுக்குயிலு... )
எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாசம் நெஞ்சத்திலே...
(காட்டுக்குயிலு... )

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழச எல்லாம் சுட்டுத்தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா டோய்
பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய்
ஊதக்காத்து வீச உடம்புக்குள்ள கூச
குப்பைக்கூளம் பத்தவெச்சு காயலாம்
தை பொறக்கும் நாளை.. விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கறும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்..

(காட்டுக்குயிலு... )

பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்லே..
பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லை
உள்ள மட்டும் நானே உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கோன்னு சொல்லுவேன்..
என் நண்பன் போட்ட சோறு நிதமும் திண்ணேன் பாரு
நட்பைக்கூட கற்பை போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி நான் தான்..

படம் : தளபதி
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ்

*****************

இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

2 Comments:

ஆயில்யன் said...

ஜூப்பரு பாட்டு :)))


//பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லை//


சூப்பரான வரிகள் :)

கப்பி | Kappi said...

பாடும் நிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Last 25 songs posted in Thenkinnam