Friday, June 27, 2008

536. உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்



உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினம்தோறும்
காலம் நேரம் ஏதுமில்லை

(உன்னைக் காணும் நேரம்)

கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி
கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி

ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
தொட வேண்டி கைகள் ஏங்கும்
படவேண்டும் பார்வை எங்கும்

இந்த பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை
மீதி இனி நாளை
மாலை வேளை வீணாய் போகும்
இந்த பார்வை ஒன்று போதும்

கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்
மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்
மடி மீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள் காலம்
பலகோடி காலம் வாழ
பனி தூவி வானம் வாழ்ஹ்ட்தும்


(உன்னைக் காணும் நெஞ்சம்)


படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam