Saturday, June 21, 2008

523. உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்


Unnarugil Varugayi - Harini Sudhakar, Haricharan



உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்
உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம்
(உன்னருகில்..)
உன் பெயரை கேட்கையில் உற்சாகம் துளிர் விடுதே
உன் நிழலை தேடியே என் நிழலும் தொடருதே இன்று
எப்போது மாறினேன் என்னை நான் மீறினேன்
என் நெஞ்சை கேட்கிறேன் பதில் சொல்லிடு விழியே..
(உன்னருகில்..)

உன் கண்கள் மீது ஒரு பூட்டு வைத்து பூட்டும்போதும்
உன் இதயம் தாண்டி வெளியே வருமே பெண்ணே
நீ பயணம் போகும் பாதை வெண்டாம் என்று சொல்லும்போதும்
உன் கால்கள் வருமே வருவதை தடுத்துவிட முடியாதே

உன் உடல் என் மனம் இங்குடல் எல்லாம்
இன்று புதிதாக உருமாறும்
நண்பர்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம்
காதில் நுழையாமல் வெளியேறும்
இது அன்பால் வருகிற அவஸ்தைகளா?
இல்லை உன்மேல் வருகிற ஆசைகளா?
இதுவரை சேர்ந்து இன்பம் துன்பங்களை
உன்னுடன் பகிர்ந்திட துடிக்கிறேனே
இது என்ன இது என்ன புது மயக்கம்
இரவோடு பகலோடு வெயிலடிக்கும்
ஆ...
ஆ...

கனவினில் தினம் தினம் பூத்திடும்
பூக்களை கைகளில் பறித்திட முடிந்திடுமா?
எதிரினில் பேசிட தயங்கிடும் வார்த்தைகள்
சொன்னால் அது புரிந்திடுமா?
கடவுளின் இருப்பிடம் காதலின் ரகசியம்
இரண்டையும் அறிந்திட முடிந்திடுமா?
இடம் பொருள் ஏவலும் இதயத்தின் காவலும்
இன்றே வெல்ல மீறிடுமா?
உன் கண்கள் பார்க்கும் திசையோடு
காரணமின்றி திரிகின்றேன்
உந்தன் பார்வை எந்தன் மீது விழ
ஏனோ நானும் காத்திருப்பேன்
வெளியே சொல்லா ரகசியமாய்
என் நெஞ்சை உருட்டுகிறாய் நீயே
சொல்லாமல் நான் மறைத்தாலும்
என் கண்ணின் மணிகள் என்னை காட்டிவிடும்

படம்: கல்லூரி
இசை: ஜோஷ்வா ஸ்ரீதர்
பாடியவர்கள்: ஹரிணி சுதாகர், ஹரிசரண்
வரிகள்: நா. முத்துக்குமார்

***

விரும்பி கேட்டவர்: கதிர்

1 Comment:

ers said...

உண்மையிலே தேன் கிண்ணம் தான். அருவி மாதிரி கொட்டுது..

Last 25 songs posted in Thenkinnam