Friday, June 27, 2008

537. நாதமெனும் கோவிலிலே




நாதமெனும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணை விட நீ கிடைத்தாய்.....
நாதமெனும் கோவிலிலே ........

இசையும் எனக்கிசையும் தினம்
என் மனம் தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும் - நீ
அசைத்தாய் நான் இசைத்தேன்
[நாதமெனும்...]

விலையே எனக்கிலையே தினம்
வெறும் கதையானது கலையே
நிலையே சொல்லி உனையே - நான்
அழைத்தேன் உயிர் பிழைத்தேன்

[நாதமெனும்...]

இறைவன் என ஒருவன் எனது
இசையில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில் - இன்று
அவன் தான் உன்னைக் கொடுத்தான்

[நாதமெனும்...]

படம்: மன்மதலீலை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: வாணி ஜெயராம்
பாடல்: கவிஞர் கண்ணதாசன்

1 Comment:

Anonymous said...

//என்னை விட//

அது
"எண்ணெய் விட நீ கிடைத்தாய்"

Last 25 songs posted in Thenkinnam