Friday, June 27, 2008

538. மூங்கில் இலை காடுகளே



மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்

மாலையிட்ட மங்கையர்க்கு
தற்கொலை தான் சொர்க்கம் என்றால்
மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள்...
கூறுங்கள்...
[மூங்கில் இலை...]

மாம்பூக்களே மைனாக்களே
கல்யாணபாவை என் கண்ணீரை பாருங்கள்
நாணல்களே நாரைகளே
பெண்பட்ட பாடுகள் எல்லோருக்கும் கூறுங்கள்
பேரம் பேசவே கல்யாண சந்தையோ
பெண்கள் யாவரும் வெள்ளாட்டு மந்தையோ
கல்யாண ஊர்வலம் எல்லாமே நாடகம்
[மூங்கில் இலை...]

பூச்சூடவும் பாய் போடவும்
கல்யாண மாப்பிள்ளை கேட்பாரே வாடகை
பொன்னோடுதான் பெண் தேடுவாள்
அம்மாடி மாமியார் பெண்ணல்ல தாடகை
கேள்வி என்பதே இல்லாத தேசமா?
யாரும் உண்மையை சொல்லாத தோசமா
பெண் இங்கு தாரமா? வந்தாலே பாரமா?
[மூங்கில் இலை...]

படம்: பெண்மணி அவள் கண்மணி
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்கள்: வாணி ஜெயராம்

1 Comment:

pudugaithendral said...

நேற்றுதாங்க ராஜ்டிஜிட்டல் பிளஸில் இந்தப் படம் பார்த்தேன்.

அருமையான பாடல்.

நன்றி

Last 25 songs posted in Thenkinnam